மும்மை
முற்றுணர்வு
மும்மை - இம்மை, மறுமை, உம்மை (வருபிறப்பு).
மும்மையணு - மூன்று சேர்ந்த ஒர் அணு.
மும்மை மலர் - மும்மலங்கொண்ட சகலர். பா.மும்மலம்
முயங்கி - மயங்கி.
முயலகனார் - நடராசப் பெருமான் ஏறி நடிக்கும் ஒரு பூதம்.
முயற்கொம்பு- இல்லாத பொருள். எ-டு முயற் கொம்பு ஏறி ஆகாயப்பூ பறித்தல். இரண்டும் இல்லாதவை.
முயற்கோடு- இல்லாத பொருள். இல்வழக்கு.
முரசு - வீரம்,கொடை,மணம் என மூன்று.
முரண் செயல்கள் - வைதல், வாழ்த்தல், கொய்தல், கொளுத்தல், வணங்கல், உதைத்தல். இவை நம்மால் செய்யப்பட்டாலும் பிணங்குதல் செய்யும் தன்மை பிரமனுடையது.(சநி4).
முரணுதல் - மாறுபடல்.
முருகநாயனார்- மறையவர். திருப்புகலுர் சோழ நாடு. மலர்த் திருமாலை தொடுத்து இறைவனுக்குச் சூட்டி வந்தவர். இலிங்க வழிபாடு (63).
முருகன் சந்நிதி சிறப்புத் தலங்கள்- 1) கச்சி (குமரக் கோட்டம்), 2)கீழ் வேளுர், 3) கொடி மாடச் செங்குன்றுர், 4) கொடுங்குன்றம், 5)சிக்கல், 6) திருப்பரங்குன்றம், 7) புள்ளிருக்கு வேளுர்.
முருட்டு - கரட்டான - முருட்டுச்சிரம்.
முருட்டுச்சிரம்- மொட்டைத்தலை.
முழங்குதல் - ஆரவாரித்தல்.
முளரி - தாமரை, எ-டு முளரி கட்கு இரவியும் போல் (சிசிசு 232).
முளை - பாசம்.
முற்கோள்- கூட்டுப் பொருளாய் உள்ளது. முதல் பொருளாகிறது என்பது சைவ சித்தாந்த முற்கோள்.
முற்செய் வினை- நல்வினை, தீவினை.
முற்பக்கம் - பூருவ பக்கம்.
முற்றம் - வீடு திருச்சிற்றம்பலம் எ-டு மூலை இருந்தாரை முற்றத்தேவிட்டவர்(திஉ12) ஒமூலை.
முற்றவர் - ஞானியர், சான்றோர். எ-டு முற்றவரின் மாட்சியே மாட்சி.
முற்றவரும் பரிசு- பேரின்பப் பயன் பெற்ற சிற்றின்பமே பேரின்பமாய் வருவது.
முற்றுணர்வினன் ஆதல் - பதி இயல்புகளில் ஒன்று. ஒரு பொருளை முழுதும் ஒருங்குணர்தல், எல்லாவற்றையும் அறியும் பேரறிவு இதுவே.
முறுகுதல்- நன்கு முதிர்தல்.
முன் - 1) காலை 2) அநாதி 3) அறிவாய் 4) சந்நிதி.
முன் செய்வினை- பிராரத்த (முடிவு) வினை
முன்றில் - முற்றம், வாயில் எ-டு மணிநிலா முன்றில் ஏறி.
முன்னம் - குறிப்பு, கருத்து, எ-டு கருதுவதன் முன்னம் கருத்தழியப்பாயும் (திப35).
முற்றுணர்வு- இறைவனுக்கு என்றும் இயற்கையாக உள்ள உணர்வு. ஒ. சுட்டுண்ர்வு. முனைதல் முற்படுதல்,
221