மொள்
யோகம்
எடுத்துத் திருமால் ஆநிலை காத்தது இங்குக் குறிப்பிடப்படுவது.
மொள்- எடு, எடு உன்னுள்ளே மொள்ளா அமுதாம் என்று உந்தீ பற (திஉ 26).
மோ
மோகம்- ஆன்மாவோடுசகசமாகவுள்ளது. மதம் முதலிய செயல்களுக்கு ஏதுவாகியது அஞ்ஞானம்.
மோகக் கொடி- மோகம் கொடி போன்று வளர்தல் உருவகம்.
மோகருபம்- மோகமாய் இருக்கும் தன்மை.
மோகன்- விரும்பும் இறைவன்.
மோகனம்- மோகனியம் என்னும் கருவி.
மோகினி- அசுத்த மாயை.
மோகனீயம்- எண்குற்றங்களுள் ஆன்மாவுக்கு மயக்கத்தைச் செய்யும் குற்றம்.
மோசித்து - விரும்பி, எ-டு மும்மலத்தை மோசித்து.
மோட்சம் - வீடுபேறு, முத்தி, பிறவா நெறி பா. முத்தி
மோதிரம்- கணையாழிகை அணிகலன்களில் ஒன்று.
மோனந்த- பேசா. மெளன. எ-டு மோனந்த மாமுனிவர்.
ய
யசோவர்மா - சைவத்தை ஆதரித்த வடநாட்டு அரசன். கி.பி. 8
யமுனை - 9 தீர்த்தங்களில் ஒன்று.
யா
யாகம்- வேள்வி. இது 18 வகை பொதுவாகக் கர்மயாகம், தவயாகம், செபயாகம், தியானயாகம் என 4 வகை. இவை அளிப்பது போகம்.
யாக குண்டம்- வேள்விக்குழி.
யாகசாலை - வேள்விச் சிலை.
யாக பாகம்- அவிர்ப்பாகம்.
யாக்கை- உடம்பு, பிறவாயாக்கை பெரியோன்; கடவுள்
யாத்தல்- கட்டுதல்.
யாதனா சரீரம்- உடலில் ஒரு வகை. பா. வேற்றுடல் சரீரம்.
யாப்பு- 1) இந்நூல் கேட்டபின் கேட்பதற்குரியது என்னும் இயைபு 2) யாத்தல் 3) செய்யுள்.
யாப்புறுத்தல் - வலியாக்கல்.
யாமை - ஆமை
யாழ்- பேரியாழ், சகோட யாழ், மகரயாழ், செங்கோட்டி யாழ் என 4.
யான்- யான் என்னும் செருக்கு.
யு
யுகம்- ஊழிகாலம், கிரேதயுகம், திரேதயுகம், துவாபரயுகம், கலியுகம் என 4.
யோ
யோகம்- இது சிவயோகமாகும். இயமம், நியமம், ஆசனம், பிராணா யாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்னும் எட்டுவகைகளில் படிப்படியாக நிற்றல். ஐம்பொறிகளை ஒடுக்கி, உயிர்ப்பை நிலைநிறுத்தி மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்களின் உள் வழிகளை அறிந்து
229