பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வியாதி

விவகரிக்குஞ் சொல்


வியாதி - நோய்.

வியாப்பியம் - வியாபிக்கப்படுவது.

வியாபகம் - நிறைவு.

வியாபக உணர்வு - சுட்டுணர்வு.

வியாபரித்தல் - தொழிற்படுதல்

வியாபி - நிறைந்திருப்பவன், இறைவன்.

வியாபிருதி - குணங்களில் ஒன்று வெளிக்காட்டமை, மறைத்தல்.

வியாப்பியம் - வியாபகத்தால் அடங்கிய நிறைவு, மலங்கள்.

வியூகம் - வகுப்பு.

விரதம் - நோன்பு சைவவிரதங்கள் 18. இவற்றில் சிவவிரதம் 9, தேவி விரதம் 3, விநாயகர் விரதம் 3, சுப்பிரமணியர் விரதம் 3, ஆன்ம சுத்திக்காகச் செய்யப்படுவது. இதனால் உடலும் சுத்தி பெறும்.

விரவுதல் - கலத்தல், பொருந்துதல்.

விராய் - கூடுதல். எ-டு ஒராலினை உணர்த்தும் விராய் நின்றனையேல் (இஇ2) ஒ. ஒராய்.

விரிசகம் - விரிந்த உலகம்.

விரிந்த நூல் - பூர்வ பக்கம் முதலியன.

விருத்த ஏதுப்போலி - ஏதுப் போலிகளுள் ஒன்று.பா.போலி

விருத்தி - விரிவு.

விருத்திப்படுதல் - படம் குடிலானது போல் விரிதல்.

விரை - கோட்டம், துருக்கம், தகரம் அகில், சந்தனம் என ஐந்து.

விலக்கியல் - விலக்குவனவற்றைக் கூறும் நூல்.

விலங்குகதி - 4கதிகளுள் ஒன்றான விலங்குப் பிறவி,

விலங்கு பேறு பெற்ற தலங்கள் - இவை பின்வருமாறு. 1) குரங்கணில் முட்டம் - அணில், குரங்கு.

2) திருமணஞ்சேரி - ஆமை.

3) திருச்சிற்றேமம் - ஈங்கோய், மலை ஈ.

4) எறும்பீச்சுரம் - எறும்பு

5) திருவைாறு - ஏறு.

6) மதுரை, வலிவலம் - கரிக்குருவி

7) சிறுகுடி - கருடன்.

8) கரவீரம் - கழுதை

9) குரங்கணில் முட்டம் - காகம், குரங்கு.

10)அயவந்தி - குதிரை.

11) திருநல்லூர் - சிங்கம்.

12) ஊற்றத்துர் ( வைப்புத்தலம்) - தவளை.

13) நாரையூர், மதுரை - நாரை.

14)திருவாவடுதுறை - பசு.

15) சிவபுரம் - பன்றி.

16)காளத்தி - பாம்பு.

17) மயிலாடுதுறை - மயில்.

18)திருச்சேலூர் - மீன்.

19)திருப்பாதிரிப்புலியூர் - முயல்.

20)திருக்குற்றாலம் - யானை.

21) சீசைலம் திருவெண்டுறை - வண்டு.

22)திருந்துதேவன்குடி - நண்டு.

விலை - வில, மதிப்பு.

விலையால் ஏற்கும் - வலிந்து ஏற்கும்.

விவகரிக்குஞ் சொல் - பொருனை அறிவுக்குஞ் சொல்.

241