பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமண்

அமையாமை

அமண், அமணம்-சமணமதம்.

அமணர் - சமணர்.

அமரர் கோன், பதி-இந்திரன்.

அமர்நீதி நாயனார் - வணிகர், பழையாறை - சோழநாடு, சிவனடியார்க்குத் திருவமுது செய்வித்துக்கோவணம் முதலியன அளித்து வந்தவர். சங்கம வழிபாடு.(6.3)

அமனன் - இறைவன்.

அம்பலத்தான் - கூத்த பெருமான். எ-டுநல் அம்பலத்தான் ஐயனே.

அம்பலம் - 1. அவை, தில்லை 2, கருவுயிர் நெஞ்சத்தாமரை

அம்பலவாண தேசிகர் - பண்டாரசாத்திர ஆசிரியர். இவர் இயற்றிய 10 நூல்க்ள் 1. தச காரியம் 2 சன்மார்க்க சித்தி யார் 3. சிவாச்சிரமத் தெளிவு 4. சித்தாந்தப் பஃறொடை 5. சித்தாந்த சிகாமணி 6. உபாய நிட்டை வெண்பா 7. உபதேசவெண்பா 8. நிட்டை விளக்கம் 9. அதிசய மாலை 10. நமச்சிவாயம்.

அம்பிகை - அம்மை.

அம்பிகை ஆட்சித்தலங்கள் - 1. காஞ்சியில் காமாட்சி 2. மதுரையில் மீனாட்சி 3. காசியில் விசாலாட்சி 4. நாகையில் நீலாய தாட்சி.

அம்பிகை பாகன் - சிவன்.

அம்புலி - திங்கள்.

அம்ம - கேள் எ-டு மொழிந்தனை அம்ம (இஇ 4).

அம்மை - உமையவள்.

அம்மை அப்பர் - உமையவளும் சிவனுமாகிய உமாபதி.

அமிர்தம் - அமிழ்தம், அமுது.

அமுது - சோறு, அன்னம். பா. மஞ்சனம்.எ-டு அமுது செய்க.

அமுதுபடி - ஆலயங்களுக்கு அளிக்கும் அரிசி.

அமுர்த்தன் - திரிபின்றி இருப்பவனான இறைவன்.

அமுர்த்தி - சாதாக்கியம் 5 இல் ஒன்று. தழல் பிழம்பான சிவ வடிவம்.

அமைச்சு - அமைச்சர், 6 உறுப்புகளில் ஒன்று.

அமைச்சரசு ஏய்ப்ப நின்று - அமைச்சரோடு கூடி நிற்பவன் அரசன் , அதுபோல, அகக் கருவிகளோடு ஆன்மா கூடி நின்று, அஞ்சவத்தைப்படும். அதாவது, அரசன் உலாச் செல்லும் போது, அமைச்சர், படைத்தலைவர் முதலிய பலரும் சூழச் செல்லினும், உலாச் சென்று திரும்பிய பின், அரண்மனையுள் புகும்பொழுது, அவரவரை அவரவர் நிற்றற்குரிய இடங்களில் நிறுத்திவிட்டுக் கடைசியில் ஒரு காவலனை மட்டும் அந்தப்புர வாயிலில் நிறுத்தி, அப்புரத்தில் தான் மட்டும் செல்வான். அது போல, ஆன்மாவும் சாக்கிர அவத்தையில் நிற்கும்பொழுது, அனைத்துக் கருவிகளோடு கூடி, அனைத்தையும் அறிந்து செயல் புரிகின்றது. பின்னர், ஒய்வு கொள்ளும்பொழுது, அக்கருவிகளை அவ்வவற்றுக் குரிய இடங்களிலேயே நிறுத்தி விட்டுத் தான் மட்டும் தனியே ஒய்வு பெறுதற்குரிய இடத்திலே சென்று ஒய்வு பெறும். “அமைச்சரசு ஏய்ப்பநின்று அஞ்சவத்தைத்தே' (சிபோ நூற்பா 4)

அமைதல் - அறிதல், இருத்தல்.

அமையாமை- நிறைவு ஆகாமை