பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருட்கண் அருவாய்

அருட்கண் - திருவருட்பார்வை. எ-டு அருட்கண்ணால் பாசத்தை நீக்கும் (சிபோ பா 70)

அருட்கண்ணார் - மெய்யறிவுக் கண்ணுடையவர்.

அருட்கேவலம் - கேவலம் 5 இல் ஒன்று. தத்துவ சுத்தியின் பின் ஏற்படுங்கேவலம்.

அருட்சத்தி - சிவனைப் பிரியாதிருக்கும் ஆற்றல்

அருட்போதம் - திருவருள் வழிப்பெற்ற அறிவு.

அருணம் -பகலவன்

அருண்மயம்-கருணை வடிவம்

அருணந்தி சிவம், சிவாசாரியார் - ஆதிசைவர். திருத்துறையூர் வேறுபெயர் சகலாகம பண்டி தர் குரு, மெய்கண்ட தேவர். சீடர் மறைஞான சம்பந்தர். சிவஞான சித்தியார் (2), இருபா இருபஃது, சிவப்பிர காசம், திருவருட்பயன், வினா வெண்பா, போற்றிப் பஃ றொடை, கொடிக்கவி, நெஞ்சு விடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் ஆகிய 10 மெய்கண்ட நூல் களின் ஆசிரியர். புறச் சந்தான குரவர். சிவ ஞான போதத்திற்கு விளக்கவுரை எழுதியவர்.13ஆம் நூற்றாண்டு.

அருத்தலின் - உண்பிப்பதால், எ-டு நடுவுநின்று அருத்தலின் நடுவன் ஆகுதியே (இஇ 16)

அருத்தாபத்தி - ஒப்பு

அருத்தாபத்திப் பிரமாணம் - ஒப்பு அளவை. பிரமாணங் களில் ஒன்று. பொருள் குறிப் புடையது. பகலில் உண்ணா தவன் பருத்திருக்கிறான். பருத் திருத்தல் உண்ணாது நிகழாது என்னுங் குறிப்பு கொண்டு, இரவில் உண்பான் என்று கொள்ளலாம். அதுபோல, உடம்பல்லாததாய் உயிர் இருந்தும், உடம்பிற்கிட்ட பெயரால் அழைக்க, அது என்னை என்றமையால், என் னென்ன என்ற கலந்து நிற்றா லன்றி நிகழாததால், கலந்து நிற்கும் எனக் கொள்ளுதல் அருத்தாபத்தி ஆகும். எ-டு இட்டது ஒரு பேர் அழைக்க என்என்றாங்கு (சிபோ பா 6)

அருட்போதம் - திருவருள் வழிப்பெற்ற அறிவு

அருத்தவாதம் - அளவைக்கு அடங்கும் பொருளை, ஆத்த வாக்கியங்கொண்டு அறிவது.

அருத்தி - விருப்பம், இசைவு, எ-டு மருத்துவன் அருத்தியோடு

அருத்தி - நுகரப்படும்.

அருந்தவன் - சைமினி. ஆரண நூலை ஆய்ந்தவன்.

அருந்துயர் - கொடிய துன்பம். அருநிதி - அரும்பொருள்.

அருமறை - வேதம் 4

அருமேனி - அருவ வடிவம். இறைவன் மும்மேனிகளில் ஒன்று. பா. திருமேனி , அருவ சொருபி- அருவ உருவ முள்ளவன். இருக்கிறான். அருவத்திருமேனிகள் - சிவம், சத்தி, நாதம், விந்து.

அருவம் - மிக நுண்மையாதல்.

அருவப் பிரபஞ்சம் - சேதனப்பிரபஞ்சம்

அருவருப்பு - சுவை9இல் ஒன்று

அருவாய் - அரு உருவாய், ஆற்றலாய், எ-டு அருவாய் ஆன்மா (சிசி சுப 213)20