அருவிடங்கள் அலைகடல் கடைந்தும்
அருவிடங்கள் - கொடிய நஞ்சு கள். எ-டு ஒளடதம் மந்திரம் உடையார்க்கு அருவிடங்கள் ஏறா (சிசிசுப 309)
அருவினை உடல் - அரிய வினை கொண்ட உடம்பு. இதில் அறிவினால் ஆவி அறி யும். எ-டு அருவினை உடலுள் ஆவி அறிவினால் அறியும் அன்றே (சிபி 53),
அருவுடம்பு - நுண்ணுடல்
அருவுயிர் - பிரளயாகலர், விஞ்ஞானகலர்.
அருவுருவம் - 1.அசத்தும் சத்தும் இருப்பதும் இல்லாததும் 2. இறைவன் மூன்று திருமேனி களில் ஒன்று.
அருவுருவத்திருமேனி- சதா சிவன் .
அருவேல் - திருமேனி அருவம்.
அருள் - இரக்கம், திரோதன ஆற்றல், திருவடி, சிற்சத்தி,
அருள் ஆர் - அருள் நூல்களில் பேசப்படும்.
அருள் ஆற்றல் - பராசத்தி, திரோதன சத்தி, இச்சாசத்தி, ஞான சத்தி, கிரியா சத்தி என ஐவகை.
அருள் உரு நிலை - சிவன், குரு உரு கொள்ளும் நிலை.
அருள் கிரியை - அருட்செயல்.
அருள் நீர்மை - சிவ அறிவு.
அருள் நூல் - வேதாகமம். அருளுதல் - கருணை காட்டல்
அலகில் - அளவிலா எ-டு அலகில் நிகழ்போகங்கள்
அலகில் குணம் - அளவிறந்த பண்பு. பிரகாசம், இலகுதை, வியாபிருதி, கெளரவம், அநி யமம் முதலியவை. 34க்குமேல்விரிதல். அவையாவன. உறுதி முதலியவை 34 பற்று முதலி யவை 9. விருப்பமின்மை முதலியவை 9.
அலகு - இயல்பு, அளவு, கூரி, வாள்
அலகு இறந்த - அளவிலா, எண்னிறந்த
அலகை - பேய் எ-டு அலகைத்தேர்.
அலங்காரம் - அழகு, அணி
அலமருவோர் - செல்வோர்.
அலமாரும் - சுழற்சியுற்று.
அலமாருவோர் - சுழல்வோர்.
அலர் - மலர்தல்,
அலர் சோகம் - மலர்தலும், வாடுதலும்,
அலர்த்துதல் - மலரச்செய்தல், அல் இருள்-இரவிலுள்ள அடர் இருட்டு,
அல்குல் - பெண்குறி, பக்கம்.
அல்லமப் பிரபு - வீரசைவத்தை நிறுவியர்களில் ஒருவர்.
அல்லல் - துன்பம்.
அல்லன - அல்லாதனவை,வேறு.
அல்லார் - அல்லாதவர்.
அலி - பேடி
அலிங்கம் - குறியற்றது. ஒ. இலிங்கம்.
அலுப்த சத்தி - பேரருள் உடைமை
அலைகடல் கடைந்தும் - தேவர்களுக்கு நித்தியத்துவம் ஏற்பட வேண்டி மகாமேருவை மத்தாகவும், வாசுகியை நாணா கவும் கொண்டு கடலைக் கடைந்து, அமுதம் தோற்று வித்துத் தேவர்களுக்குக் கொடுத்தவன் மாயவன்.21