{{rh|அவ்வியத்தலிங்கம்||அவிழ்}{ru।e}
தோடு கூடிய சிவம் 3. ஆன்மா.
அவ்வியத்தலிங்கம் - அருவத் திருமேணி.
அவ்வினைஞர்-ஆன்மாக்கள்.
அவ்வுரை - புறச்சமயத்தார் கூறும் மொழி, எ-டு. அவ் வுரைகேளாதே உந்தீபற(திஉ3)
அவ்வெதிரேகம் - வைதன்மிய திட்டாந்த ஆபாசம் 5 இல் ஒன்று.சாத்தியதர்மம்இல்லாத விடத்துச் சாதனைத் தர்மம் இல்லை என்பது.
அவ்வேறு - ஞாயிறு, திங்கள், விண்மீன் முதலியவற்றோடு கூடி நாழிகை, திங்கள், ஆண்டு முதலிய பாகுபாடுகளைச் செய்வது காலத் தத்துவம். அந்த ஞாயிறு, திங்கள், விண்மீன் முதலியவற்றிலிருந்து வேறுபட்டது போல் உயிரும் அந்தக் கரணங்களிலிருந்து வேறுபட்டதே.
“அவ்வேறாம் போதுபோல் ஆங்கு" (சிபோ பா 24)
அவந்திர சைவர் - சிவ தீக்கை பெற்றவர்.
அவா - குற்றம் 5 இல் ஒன்று. விரும்பியதை பற்றுவது. ஆசை.
அவாந்தரக் காரணம்-இடைப்பட்ட காரணம்.
அவாயம் அற - தீமை நீங்க. அஞ்செழுத்தே திருமேனி யாகக் கொண்டு ஆன்மாக்கள் பிறவிறத் தக்கதாகச் சிவன் ஆடுவான் (உ வி 32)
அவாய்நிலை-ஒரு சொல் தன் கருத்தை நிரப்புவதற்குப் பிறி தொரு சொல்லை அவாவி நிற்கும் நிலை, எ-டு தோற்றிய திதியே (சிபோ பா1) தோற்றிய என்னும் சொல் ஒருவனால் என்னும் சொல்லை அவாவி நிற்பது.
அவி - வேள்வி, உணவு. எ-டு திருநின்ற போகம்வளர் அவி சென்று மேவியது. (சிசி பப 203)
அவிகாரம் - திரிபின்மை, எ-டு குலவு சகமும் அவிகாரம் (சிசி பப 224).
அவிகாரி- திரிபில்லாத கடவுள். எ-டு அரு அவிகாரி ஆன்மா (சிசி சுப 213)
அவிகாரவாத சைவன் - பக்குவம் அடைந்த ஆன்மாவானது அறிவு பெற்றுத் திரிபின்றி இருக்கும் பதியைத்தானே சென்றடையும் என்று கூறும் சைவன்.
அவிச்சை - மயக்கம், ஆணவம் ஆஞ்ஞானத்தோடு கூடி நிற்பது ஐந்து குற்றங்களில் ஒன்று. நல்லது தீயது, தீயது நல்லது என்று தவறாக மதிப்பது.
அவிச்சைக்காலம் - அஞ்ஞானத்தை உடைய காலம். அவித்தை,
அவிஞ்சை - அஞ்ஞானம், அறியாமை. எ-டு காதலால் அவித்தை சிந்த (சிசிசுப 174)
அவித்தையினோன் - அறியாதவன். எ-டு மாயாவாதி அவித்தையினோன் உரை, நித்தன் அறிவன்.
அவிப்பாகம் - தேவர் உணவின் பங்கு
அவியாது - கெடாமல்,
அவிழ இருக்கும் அறிவு - சிவஅறிவு.
அவிழ்-சோறு,தவிட்டுக்கூழ், திற.