இங்கு
இணைமலர்
இங்கு - பெருங்காயம் எ-டு இங்குளி வாங்கும் கலம் போல (சிபோ பா 65)
இச்சா சத்தி - சிவனின் விருப்பாற்றல், ஐவகைச் சத்திகளில் ஒன்று.
இச்சை - விருப்பம், விழைவு, அன்பு
இச்சையால் உருவங் கொள்வான்-திருமால் தானாகவே உரு வெடுத்ததாக வரலாறு இல்லை. உமையவள் இகழப்பட்ட தக்கன் வேள்வியிலே எக்கியமூர்த்தியாக அவி கொள்ள இருந்தான். அப்பொழுது வீரபத்திர தேவர் அச்சமுண்டா கும்படித் திருமால் தலையை அறுத்தார். அவ்வாறு அறுக்கப்பட்ட தலையை மீண்டும் அவனால் உண்டாக்கிக் கொள்ள முடியவில்லை. பின் தேவர்கள் வேண்ட, அயன் அரிக்குத்தலை, உண்டாக்கினான் (சிசி பப 273)
இசை-தாரம், உழை, குரல், இளி, துத்தம், விளரி, கைக்கிளை.
இசைக்கருவி - தோற்கருவி, துணைக்கருவி, நரம்புக்கருவி, மிடற்றுக்கருவி.
இசைஞானியார் - ஆதிசைவர், திருவாரூர்-நடுநாடு சுந்தரரின் தாய். இலிங்க வழிபாடு மூவகைப் பெண்பால் அடியார்களில் ஒருவர். மற்ற இருவர் காரைக்கால் அம்மையார், மங்கையர்க்கரசி (63).
இசைந்து - கூறி, சமனாக்கி
இடங்கழி நாயனார் - அரசர், கொடுப்பாளுர்-சேரநாடு. தன் நெற்பண்டாரத்தில் நெல்லைக்களவாடிய சிவனடியார் ஒருவரைக் கண்டு அவரை வணங்கி, நெற்பண்டாரத்தோடு மற்ற நிதிப்பண்டங்களையும் அவருக்கு அளித்தார் (63)
இடத்திரிபு -தானம்வேறுபடுதல்
இடந்து -பெயர்த்து.
இடபம் -எருது. 12 இராசிகளில் ஒன்று.
இடம் - 1. தாங்குபொருள். எ-டு பசுவின் இடமாய் நிறைந்த இறைவன் (நெவிதூ 5) 2. அதிகரணம் 3. தன்மை, முன்னிலை, படர்க்கை.
இடர்ப்பாடு - 1. ஆற்றலைக் குறைத்தல் 2. துயர் உறுதல்
இடுதல் -வைத்தல், கொடுத்தல்
இடும்பை - துன்பம்
இடை - நாடி 3 இல் ஒன்று.
இடைக்காட்டுச் சித்தர்- சித்தர்கள் 18 பேரில் ஒருவர்.
இடைப்பிறவரல் - இடையே சொற்கள் வருதல்.
இடையார் - 1 மலம் நீங்கியவர் 2. இடையுள்ள பெண்கள்.
இடையீடு - இண்டவிடல்
இடையூறு - துன்பம்
இணங்குதல்- நட்புகொள்ளுதல்.
இணர் - பூக்கொத்து, மாலை எ-டு இணர் ஆர்.பூந்தொடையும் (சிசி சுப 243)
இணை - இரண்டு.
இணை அடிகள் - இருதிருவடிகள்.
இணைமலர் - ஞானம், சரியை ஆகிய இருதிருவடிகள். ஞானத்தால் உலகை நோக்குவதும், கிரியையால் அதனை நடத்துவதும் ஆகிய இரண்டும் நடைபெறும்.