பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருமலத்தார்

இலகு பலகை


இருமலத்தார் - பிரளயாகலர். இருமலத்தைக் கொண்டவர்.

இருமுச் சமயம் - 3+3 = 6 அகச் சமயம்: வாமம், வைரவம், மாவிரதம், காளாமுகம், பாசு பதம், சைவம்.

இருமை - இம்மையும் மறுமையும்.

இருவகை அஞ்சவத்தை-மேல், கீழ் என்னும் இருவகை அஞ்ச வத்தை.

இருவகை இயல்பு - இருவகை இலக்கணம்.

இருவினை - நல்வினை (அறம், புண்ணியம்) தீவினை (மறம், பாவம்) ஆகிய இரண்டு. இவற்றை இறைவன் உயிர்களுக்கு ஊட்டி, அவற்றை அறவளர்ச்சியிலும் ஆன்மிக வளர்ச்சியிலும் நிறைவு செய்து வளர்க்கின்றான் என்பது சைவ சித்தாந்தம் மற்றும் பதி இருவினை, பசு இருவினை, பாச இருவினை எ-டு அவையே தானேயாய் இருவினையின் (சிபோ நூபா 2).

இருவினை ஒப்பு - கன்ம ஒப்பு நல்வினை, தீவினை ஆகிய இரண்டையும் விருப்பு வெறுப்பின்றி ஒரே நிலையில் கருதுதல் அமுதைப் பிறர்க்களித்து, நஞ்சைத் தாமுண்டு விளங்கும் நல்ல மெய்ஞ்ஞானத்தோடு அத்துவிதமாகும் நிலைக்கு வளரக் கூடியது. இந்நிலை மலபரி பாகமான நிலையாதலால், சத்திநிபாதமும் குருவருளும் ஏற்பட வாய்ப்புண்டு. அதாவது, மெய்ஞ்ஞானத்தைப் பெற உதவும் முந்நிகழ்ச்சிகள் இருவினை ஒப்பு, மலபரி பாகம், சத்திநி பாதம் ஆகியவை ஆகும். சரியை முதலிய சிவ புண்ணியங்கள் செய்தலாலும் ஆன்மாவிற்கு இருவினை ஒப்பு உண்டாகும் பா. மலபரி பாகம், சத்திநிபாதம்.

இருள்- ஆணவம் ஒ.ஒளி.

இரிய - நீங்க எ-டு நிறை இருள் இரிய (சிபி 93).

இலகவே - நீங்க.

இலக்கணம், இலட்சணம் - இயல்பு 1. பொது இலக்கணம், உண்மை இலக்கணம் (சிறப்பிலக்கணம்) என இருவகை 2. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐவகை.

இலக்கணம்,உப-ஒன்று தனக்கு இனமான பிறவற்றையும் தெரிவிப்பது.

இலக்கணம், சாதாரண-பொது இயல்பு.

இலக்கணம்,சொருப-உண்மை இயல்பு.

இலக்கணம்,தடத்த - பொது இயல்பு.

இலக்கண நலங்கள்- சைவசித்தாந்த நூல்கள் எளிய கருத்து விளக்கத்திற்காக இனிய இலச்கண நலங்கள் நிரம்பியவை. அவை உத்திகளும் அணிகளும் ஆகும் எ-டு இரட்டுற மொழிதல் உத்தி ஏகதேச உருவகம் அணி.

இலக்கண வாக்கியம்-இயல்பாய் உள்ள தன்மையை எடுத்துக்காட்டும் வாக்கியம்.

இலக்கணவியல்- பொது இலக்கணம், உண்மை இலக்கணம் பற்றிக் கூறும் துறை.

இலகுபலகை - பொற்பலகையாகிய சங்கப் பலகை, இதனை இட்டு அருளியவன் சிவன்.

53