பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலாபம்

இலிங்கி


காணாததுமாக இருக்கும். பிற கருவிகளும் இவ்வாறே இருக்கும்.

சகல சொப்பனம், சகல சுழத்தி முதலியவையும் புருவ நடுவில் (இலாடத்தில்) நிகழும். இருப்பினும் இடையிடையே சிவ தத்துவம் ஐந்திலிருந்து நான்கு மூன்று, இரண்டு, ஒன்று என ஏற்ற பெற்றியால் குறைந்து போவதால், உலக அறிவு இடையறவின்றி நிகழாது.

கேவல அவத்தைகளிலும் ஆன்மா புற உலகத்தை அறியா தொழியினும், அந்நிலைகளில் ஆணவ இருள் மேலிட, அறியாமையில் அழுந்துவதாகும்.

சகல அவத்தைகளில் உலகத்தை அறியாவிட்டாலும், ஆணவம் மேலிடாமையால், குறிப்பிட்ட ஒரு பொருளிலே அழுந்தி இருக்கும்.

சுத்த சாக்கிரம் முதலியவை தத்துவ தாத்துவிகங்களாகிய மாயா கருவிகளால் நிகழாது. இறைவன் திருவருளாலேயே நிகழும். ஆகையால், அந்நிலையிலும் கருவிகள் இல்லாது ஒழியினும், ஆன்மா ஆணவ இருளிலோ உலகப் பொருளிலோ அழுந்தாது, இறைவன் திருவருளில் பதிந்து நிற்கும். (சிவஞானபோதம் பா29).

இலாபம் - ஈட்டம்.

இலி_இல்லாதவர்.ஒப்பார் இலி-ஒப்பில்லாதவர்.

இலிங்கம் - குறி. சிவனுரு உருமேனி, ஆன்மாக்கள் தம்மை வழிபட்டு உய்ய வேண்டிச் சிவபெருமான் கொண்ட நிர்குண வடிவமாகிய சகளவடிவம்.

இலிங்கத்தத்துவம் - இலிங்கம் ஒர் அடையாளம் அல்லது குறியை உணர்த்துவது. சைவ இலக்கியத்தில் எதனுள் யாவும் ஒடுங்குகின்றனவோ அது இலிங்கம் ஆகும்.

வேள்வி வழக்கில் யோனி என்பது யக்ஞ குண்டத்தையும் இலிங்கம் அதனின்று எழும் தீயையும் குறிக்கும்.

யோகப் பயிற்சியில் ஆறு ஆதார சக்கரங்கள் யோனி எனக் கொள்ளப் பெறும். அவற்றுள் எழும் ஒளி இலிங்கம் ஆகும்.

அளவை இயலில் கருதல், இலிங்க பராமரிசத்தை அடிப்படையாகக் கொண்டது. இலிங்க பராமரிசம் - குறி ஆராய்ச்சி (சிவஞான முனிவர்) இலிங்கம் ஓங்காரத்தைக் காணுவதற்குரிய அறிகுறி. அகர, உகர, மகரங்களின் சேர்க்கை.

இலிங்கத்தின் அடிப்புறத்தைப் பிரம்மாவாகவும் நடுப்புறத்தைத் திருமாலாகவும் மேற்புறத்தைச் சிவனாகவும் கூறுவது மரபு. இலிங்கம் உருவாயும் அருவாயும் அருஉருவாயும் உள்ளது. இலிங்கம் சைவ சமயத்திற்கு மட்டுமல்லாது அனைத்துச் சமயத்திற்கும் உரியது.

இலிங்க வகை - ஐந்து வகை. பா. அணு ஐந்து.

இலிங்க வழிபாடு - சிவபெருமானின் அருவுருவத் திருமேனி கொண்டது சிவலிங்கம். இதனைத் தொழுவதே இலிங்க வழிபாடு, பா. வழிபாடு.

இலிங்கி - குறிபால் உணர்த்தப்படும் பொருள்.

55