பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலிங்கியர்

இறைநெறி


இலிங்கியர் - அனுமானப் பிரமாணத்தை அடிப்படையாகக் கொண்டு வாதிடும் புறச்சமயத்தார்.

இலீலை - தெய்வம் முதலியவற்றின் விளையாடல் அல்லது திருக்கூத்து. எ-டு மன்மதலீலை.

இலேசாற்கொள்ளுதல் - ஏக தேச விதியாகக் கொள்ளுதல். ஒர் உத்தி.

இழவு - கேடு, வறுமை.

இழிசொல் - குறளை, பொய், கடுஞ் சொல், பயனில் சொல் என நான்கு.

இழிந்தார் - செருக்கொடு சிவ நிந்தனை செய்பவர்.

இழிவு-சாக்காடு.

இளங்கோயில்-பலாலயம் ஒரு பழங்கோயிலுக்குக் குடமுழுக்கு நிகழ்த்துங்கால், கடவுளை வேறாக ஆவாகனம் செய்து வைக்கப்படும் சிறிய கோயில்.

இளம் பெருமானடிகள்-11 ஆம் திருமுறையில் சிவபெருமான் திருமும்மணிக்கோவை பாடியவர்.

இளமை - இளந்தன்மை. ஒ. மூப்பு இளைப்பு சோர்வு, வருத்தம் எ-டு இளைப்பதும் ஒன்றில்லை இவர் (திப 76).

இளையான்குடிமாற நாயனார் வேளாளர். இளையான்குடி பாண்டிநாடு சங்கம வழிபாடு (63).

இவன் - இறைவன். எ-டு எல்லாமாய் நிற்கும் இவன் (தி ப45).

இவ்வான்மாக்கள் - இறப்பில்லாத தவமிகுதியால்,இருவினை ஒப்பு, மலபரிபாகம், சத்திநி பாதம் ஆகிய மூன்றும் வரப்பெற்ற ஆன்மாக்கள்.

இவுளி-குதிரை.

இவுளியார்-குதிரை வீரர்கள் எ-டு இவுளியார்க்கு முன்வரும் அவதாரங்கள் (சிசி பப 288).

இழுத்தல் - அறியச் செய்தல்.

இழை - நூல், பனுவல்.

இளி- ஏழு பண்களில் ஒன்று.

இறந்த- ஒடுங்கிய.

இறந்தோய் - கருவி அறிவுக்கு அப்பாற்பட்டவனே.

இறப்பில் தவம் - அழிவிலாப் புண்ணியம்.

இறப்பு-சாவு.இம்மை நிகழ்ச்சி பா. போக்கு.

இறவா இன்பம் - பேரின்பம் .

இற்பட - இல்லாதவாறு இற்படப் பிரிப்பின் மெய்ப்படும் (சநிரா 4).

இற்பு- இருள் தருவது.

இற்புக்கு - இல்புக்கு இல்லம் புகல்.

இறுதல் - அழிதல்.

இறுதி - சங்காரம், அழிப்பு.

இறும்பு - சிறு நூறு, புழு, எ-டு. வண்டு இறும்பு எடா உட்கொண்டு (சநிரா12).

இறுவாய்-இறுதி

இறை, இறைவன் - எல்லாங்கடந்த கடவுள், புருடனுக்கு மேலாகவுள்ள 24 தத்துவங்கள் (மெய்யங்கள்). அட்டாங்க யோகத்தால் இதைப்பெறலாம்.

இறைநெறி - மெய்ந்நெறி. அருள் நெறி. இது நீடுபுகழ் நிலைத்த நெறி. இறைவன் உயிர்களைப் புரத்தற்பொருட்டு, அவன்தானே ஆகிய நெறி, எ-டு அவனே

56