பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உட்கோயில்

உத்தமர் அல்லர்


உட்கோயில் - கோயில் கருப்பக் கிரகம்.

உட்சமயம்-பா.அகச்சமயம்

உட்பேதம்- அகவேறுபாடு

உடைத்தாதல் செல்லாது - உடைத்தாகாறு செல்லல் ஒரு துணை வினை. செல்லாது நிகழாது.

உடைமை - உடையதாகிய தன்மை, பொருள்.

உடைமைப் பொருள் - இறைவனுக்கு உயிர் அடிமைப் பொருள். மாயையுங் கன்மமும் அவற்றின் காரியங்களுக்கு உடைமைப் பொருள்கள்.

உடையர் - செல்வர்.
உடையான் - ஒருபொருளைத் தனதாகக் கொண்டிருப்பவன்.
உணக்கியே - வருத்தமுற்று. பயனில்லாது. எ-டு. உணக் கியே உழல்வீர்.

உணங்கிடும் - ஒருங்கிடும்.

உணர்தல் - 1. அறிதல். உற்றுணர்தல், ஆராய்தல், தெளிதல் என இது மூவகைப்படும். (சி.சி.ப.ப 96) 2. பாவித்தல், அறிவுறுத்தல், துயிலெழல்.

உணவு வகை-கடித்தல், நக்கல், பருகல், விழுங்கல், மெல்லல் என ஐந்து.

உணர்வு-பட்டறிவு, நுகர்வறிவு. சுட்டுணர்வும் முற்றுணர்வும். முன்னது நிலையற்றது. பின்னது நிலையானது.

உண்டல் - விளங்குதல்.

உண்டி - நுகர்ச்சி.

உண்டிவகை - உண்ணல், தின்னல், நக்கல்,பருகல்.

உண்டைக்கட்டி- கோயில் பட்டைச்சோறு.சிவன்கோயிலில் தயிர்ச் சோறும் பெருமாள் கோயிலில் புளிச்சோறும் சிறப்புள்ளவை.

உண்ணுதல் - அழுந்துதல்.

உண்மை-1 மெய்யானது 2ஆறு பகைகளுள் ஒன்று 3 நிகழ்ச்சி.

உண்மைச் சிவபுண்ணியம் - உலகப் பயன் கருதாதது, அன்பே காரணமாகச் செய்யப் படும் சிவ புண்ணியம் ஞானத்திற்கு நேர்ச்சாதனம்.

உண்டிவினை- இன்பதுன்ப நுகர்ச்சி. பா. இருவினை, மூவினை.

உண்மையால் சுட்டப்படுதல் - உள்பொருளாகச் சுட்டப் படுதல்.

உண்மைநெறி விளக்கம் - 14 மெய்கண்டநூல்களுள் ஒன்று. ஆசிரியர் உமாபதி சிவம். சிறந்த சித்தாந்த நூல். பத்துச் செயல்களையும் பாங்குற விளக்குவது.

உண்மைப்பொருள்- பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள். உண்மை விளக்கம் - 14 மெய்கண்ட நூல்களுள் ஒன்று. ஆசிரியர் திருவதிகை மனவாசகம் கடந்தார். சித்தாந்த உண்மைகளை எளிதாகக் கற் றுணர்வதற்கு ஏற்ற நூல். இதனைச் சைவ சித்தாந்த பால பாடம் அல்லது அரிச்சுவடி எனலாம்.

உதகம்- புவி, நீர்.எ-டு உண்டாம் - உதகத்து ஆங்கே.

உதரம் - வயிறு.

உதவி - உபகாரம்.

உத்தமர் அல்லர் - ஒரு காலத்தில் திருமால் வாமன வடிவங்