உலக ஆனந்தம்
உலோகம் ஏழு
ஆக்காது ஆக்கி நோக்காது நோக்கி என்று கூறியமையால், அவ்வாறே நொடித்து என்பதற்குமுன் நொடியாத என்று இல்லாவிட்டாலும், உரையிற் கோடல் என்னும் உத்தியால் வருவிக்கப்பட்டது.
"நோக்காது நோக்கி (நொடியாது) நொடித்துஅன்றேகாலத்தில்" (சிபோ பா4)
உலக ஆனந்தம்-சிற்றின்பம்
உலகம் - 1. உயிர்த்தொகுதி 2. பொருள் தொகுதி. உலகம் அவையம் பருப்புடையது.
உலகம் -1. பிரபஞ்சம் 2 புவனம். இது 224 பொதுவாகத் தத்துவ வழக்கில் உலகம் நான்காகும். அவை பின்வருமாறு:
1. சொல்லுலகம் (சத்தப்பிரபஞ்சம், இதில் மந்திரம் (11), பதம் (81), வன்னம் (51) என மூன்று அடங்கும்.
2.பொருள் உலகம் (அர்த்தப் பிரபஞ்சம்) இதில் புவனம் (224), தத்துவம் (36) என இரண்டு அடங்கும்.
3.பருப்பொருள் உலகம் (அசேதனப் பிரபஞ்சம்).
4.அறிவுடை உலகம் - (சேதனப் பிரபஞ்சம்) புராண வழக்குப்படி பூலோகம், பரலோகம் (சொர்க்கம்), கீழ்மேல் உலகம் என உலகம் நான்கு வகை. இவ்வகையில் விண் ஏழு, பார் ஏழு ஆகியவையும் அடங்கும்.
உலகம்,கீழ் - அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், இரசாதலம், பாதாளம்,
உலகம், மேல்-பூலோகம், புவர் உலோகம், சுவர்லோகம்,சனலோகம், தபோலோகம், மகர லோதும், சத்திய லோகம்
உலகவினை-தண்ணிர்ப்பந்தல் முதலியவை அமைத்தல். நிவர்த்தி கலையில் அடங்கும். அசுத்தப் போகத்தைத் தரும்.
உலகாயதர் - நாத்திகர். கடவுள் இல்லை என்னும் கொள்கையினர்.
உலகாயதம் - நாத்திக மதம். கடவுள் இல்லை என்னும் கொள்கையுள்ள சமயம் இதன் மூலவர் பிருகஸ்பதி
உலகாயவாதி- உடம்பு வேறாய் ஒன்றும் இல்லை என்னும் கொள்கையினர்.மகளிர் வயப்பட்டு நின்று துய்க்கும் இன்பமே வீடுபேறு என்பர்.
உலகியல்வழக்குரை-உலகியல் வாதம்.
உலகு - உயர்ந்தோர்.
உலண்டு.- கோற்புழு,
உலவம் - காற்று எ-டு உலவத் துக்கு மருவும் அனலோடு நீர் (சிசிப ப 11)
உலவாக்கிழி-குறையாப் பொன்முடிப்பு. திருஞானசம்பந்தர் சிவனிடமிருந்து பெறுதல். பா. திருஞான சம்பந்தர் செய்த அற்புதங்கள்.
உறுதை -சிலந்தி
உலோக தருமிணி - போக காமிகட்குச்செய்யப்படும் சபீச தீக்கைவகைபா.சிவதருமிணி
உலோகம் ஐந்து - பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம்.
உலோகம் ஏழு - செம்பொன், வெண்பொன், கரும்பொன், செம்பு, ஈயம், வெண்கலம், தரா.