பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலோகம் ஒன்பது

உள்ளந்தக் கரணம்



உலோகம் ஒன்பது - தமனியம், இரும்பு, தாமிரம், ஈயம், வெள்ளி, பதுகம், இரதி, நாகம், கஞ்சம்.

உலோசனம் - கண்.

உலோபம்- இவறல். பகை 6ல் ஒன்று.

உலைவு - கேடு. எ-டு உலைவு இல் அரன் பதத்தை (சிபோ பா 51)

உவப்பு - மகிழ்ச்சி, எ-டு ஒரு பொருள் இவ்வியல் உவப்பு என உணர்க.

உவமானம் - ஒப்பு அளவை 8 இல் ஒன்று. நையாயிகர்கள் உவமானத்தைத் தனி அளவையாகக்கொள்வர்.ஆமா(கவயம் காட்டுப் பசு) என்னும் விலங்கைத் தெரியாதவனுக்கு, அது பசுவை ஒத்திருக்கும் என்று கூறுவது பொதுவாகக் கூறப்பெறும் எடுத்துக்காட்டு

உவமேயம் - உவமானத்தால் விளக்கப்படுவது.

உவமைத்தொகை-எ-டு ஆகாயக் கூத்தாட்டு ஆகாயத்திலுள்ள காற்றுடன் சென்று (குடத்தி லுள்ள காற்று) கலத்தில் ஒரு கூத்தாட்டுப் போன்ற நிகழ்ச்சியாகும் என்று விரித்துக் கொள்ள இடம் தருவது.ஆகையால் இது உவமைத்தொகை

"குடகாய ஆகாயக் கூத்தாட்டாம் என்பது”

உவர்- உவர்மண்.

உவர்ப்பு - வெறுப்பு, துவர்ப்பு.

உவா- அமாவாசை, பெளர்ணமி என இரண்டு.

உழத்தல் - முயலுதல், எ-டு உழத்தல் உழந்தவர் சிவன்தன் உருவம் பெறுவார்.

உழப்பு - முயற்சி, எ-டு பழக்கம் தவிரப் பழகுவது அன்றி உழப்புவது எனபெனே உந்தீபற (திஉ 2)

உழவாது - முயற்சி இல்லாமல், எ-டு உழவாது உணர்கின்ற யோகிகள் (திஉ 16)

உழவு - உழுதொழில், உழைப்பு. எ-டு உழவும் தனிசும் (கடமையும்) ஒருமுகமேயானால் இழவுண்டோ (கேடு)?

உழுவை - புலி எ-டு கொல்லரி உழுவை நாகம் (சிசி பப 86).


உளகம்பம்-உளநெகிழ்ச்சி.எ-டு உளகம்பம் கொண்டு உள்உருகி (நெவிது 60)

உளதாய்-இருப்பதாய், தோன்றுதல்

உளதாகச் சுட்டப்படுதல் -- மெய்யாகச் சுட்டப்படுதல்.

உளதாதல் - தோன்றுதல்.

உளம்,உளன் - புருடத்துவம், உயிர், ஆன்மா, அகம்.

உள்கிற்றை - கருதியவற்றை.

உள்குவார் - கருதுவார்.

உள் நீர்மை -உள்ளொளி

உள்பொருள் - உள்ளபொருள். ஒ. இல்பொருள்,

உள்வழக்கு-வழக்கு 6இல் 1 பா. வழக்கு

உள்ளடைவு - நுகர்வதற்குரிய முறை.

உள்ளது - முன்னரே இருப்பது, வினை.

உள்ளந்தக் கரணம் - உள் அகக்கருவி. காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்னும் ஐந்து. இது சைவசித்தாந்தத்திற்கே உரியது. இக்கருவிகளால் அறிவு பொதுவாகவும்

67