ஏகனாதல்
ஏர் ஆர்
4.அன்றி, வெள்ளையும் தாமரையும் போலக் குணகுணித் தன்மையால் ஒற்றுமைப்படுதலா? 5.அன்றி, தீயும் இரும்பும் போல ஒன்றினொன்று விரவுதலால் ஒற்றுமைப்படுதலா? 6. அன்றி, பாலும் நீரும்போலப் பிரிக்கப்படாத சையோகத்தால் ஒற்றுமைப்படுதலா? 7.அன்றி, கருடனும் மாந்திரிகனும் போலப் பாவனை மாத்திரத்தால் ஒற்றுமைப்படுதலா? 8.அன்றி, காய்ச்சிய இரும்பின் நீர்போல ஒன்றினொன்று இலயமாகிய ஒற்றுமைப்படுதலா? 9.அன்றி, பேயும் பேய்ப்பிடியுண்டவனும் போல ஆவேசத்தால் ஒற்றுமைப்படுதலா? 10. அன்றி, காட்டத்தின் எரிபோல விளங்காமையால் ஒற்றுமைப்படுதலா? 11. அன்றி, தலைவனும் தலைவியும் போல இன்ப நுகர்ச்சி மாத்திரையால் ஒற்றுமைப்படுதலா? 12. அன்றி, நட்டோர் இருவர் போல நட்பின் மிகுதியால் ஒற்றுமைப்படுதலா? 13.அன்றி,ஆவும் ஆமாவும்போல ஒப்புமை மாத்திரையால் ஒற்றுமைப்படுதலா? என அவ்வச் சமயவாதிகள் மதம் பற்றி நிகழும் இன்னோரன்ன ஆசங்கைகளை எல்லாம் நீக்குதற்பொருட்டு அவனே தானே ஆகிய அந்நெறி என உவமே எடுத்துக்காட்டி ஓதினார்.
ஏகனாதல் - இறைவனுள் ஒன்றாதல்.
ஏகாங்க நமக்காரம் - தலைமேல் இருகை கூப்பி வணங்குதல்.
ஏகான்ம வாதம் - ஆன்மா ஒன்று என்னுங் கொள்கை. இக்கொள்கை உடையவர் ஏகான்ம வாதி. இது நான்கு வகை 1 பரிணாம வாதம் 2 கிரீடாப்பிரம வாதம் 3 மாயா வாதம் 4 சத்தப்பிரமம்
ஏகோ ராமர் - வீரசைவ ஆசாரியார்
ஏடெதிர் - மதுரை வைகையில் தேவார ஏட்டை எதிர் கொள்ளுமாறு திருஞானசம்பந்தர் செய்தல் (திப70) பா. திருஞானசம்பந்தர் செய்த அற்புதங்கள்.
ஏண் - வலிமை. எ-டு ஏனும் ஒன்றுடையவாகி எங்கும் அணு. (சிசி பப 150)
ஏணது-ஏற்புடைய, நிலையுள்ள. எ-டு ஏனது ஒன்று புற்கலத்தின் எய்தும் என்னின் நாசமே (Զ& լյլ 160)
ஏனும் - ஏற்கும், நிலையுள்ள. எ-டு ஏனும் ஒன்றுடைய வாகி (சிசிபப 150)
ஏதம் - குற்றம்
ஏத்துதல் - அருள்வழி நிற்றல்
ஏது-1 காரணம் - கொள்கையை நிறுவும் வாயில், மூவகை : 1. இயல்பு ஏது 2. காரிய் ஏது 3. அனுலப்தி ஏது. மற்றொரு பொருள் எற்றுக்கு
ஏந்திழை - அணிகலம் தாங்கும் அணங்கு.
ஏந்திழ்ையார் முத்தி-வீடுபேறு வகையில் ஒன்று. உலகாயதர் இவ்வுலகில் சிற்றின்பம் நுகர்தலை முத்தி என்பர். பா. முத்தி
ஏர் ஆர் - அழகுள்ள.