பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐவகை இசைக்கருவிகள்

ஒண்கருட தியானம்



ஐவகை இசைக்கருவிகள் - தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி, கண்டக்கருவி.

ஐவகைச் சங்காரம் - பிரமன், விட்டுணு, உருத்திரன், அனந்ததேவர், சதாசிவர்.

ஐவகைச் சத்தி - பராசத்தி, திரோதன சத்தி, இச்சாசத்தி, ஞான சத்தி, கிரியா சத்தி,

ஐவகைச்சமயம்-அறுவகைச் சமயத்துள் பெளத்தம் தவிர்த்த உலகாயதம், சாங்கியம், நையாயிகம், வைசேடிகம், மீமாஞ்சகம் என்னும் ஐந்து சமயங்கள்

ஐவகைச்சுத்தி- தான சுத்தி, பூதசுத்தி, திரவியசுத்தி, மந்திரசுத்தி, இலங்கச்சுத்தி,

ஐவகைச்சுற்றம்- நட்பாளர், அந்தணர், மடைத்தொழிலாளர், மருத்துவ கலைஞர், நிமித்திகப் புலவர்.

ஐவகைப்பாசம் - பா. ஐந்து மலம்,

ஐவகை முத்தி - சீவன்முத்தி, அதிகார முத்தி, போக முத்தி, இலய முத்தி, பரமுத்தி, பா. முத்தி,

ஐவகை வினை - உலக வினை, வைதிக வினை, அத்தியான்மிகவினை, அதிமார்க்கவினை, மாந்திரவினை என நல்வினை ஐவகை இவை ஒன்றுக்கொன்று ஏற்ற முடையவை.

ஐவர் - ஐந்து பேர், ஐங்குரவர், பஞ்ச பாண்டவர், ஐம்பொறிகள்.



ஒசித்து - முறித்து எ-டு கொம்பை ஒசித்து நடுதல்

ஒட்டி - அணைந்து.

ஒட்டு - முதல்வன் உயிர் உணர்வு, புலன் உணர்வு ஆகிய இரண்டும் ஒப்பு விரவி நிற்பவன். இருப்பினும், உயிர் உணர்வு போலப் புலன் உணர்வு பரவுகை இன்றி, ஏகதேச விளக்கமாக உள்ளது. உயிர் உணர் விற்குரிய அம்மேம்பாடு, அப்பரவும் உணர்வை இழந்த பசுத்தத்துவம் உடையாரிடம் அறியப்படாதது. ஆயினும், அவர்தம் பசுத் தத்துவம் நீங்கிய சிவப்பேற்றின் கண் அறியப்படும் என்பது இங்குப் புலப்பட வைக்கப்பட்டதால், அது ஒட்டு என்னும் பிறிது மொழிதல் அணியாகும்.

'கண்போல் அவயவங்கள் காணாஅக் கண்ணிலார் கண்பேறே கண் அக் கழல்” (சிபோ வெ 52)

ஒடிவின்றி - முறிவின்றி.

ஒடுக்கம் - ஐம்பொறிகள் அடங்கல். சுழுத்தி. பொறிகளில் கனவு ஏற்படுதல்.

ஒடுக்க முறை - தத்துவங்கள் தோன்றும் பொழுது கீழிருந்து எண்ணும் முறை. ஒ. தோற்ற முறை.

ஒடுங்குதல் - மறைதல்.

ஒடுங்குமிடம் - இடம், காலம் என்பனநாம் வாழும் உலகுக்கே உரியவை. அதற்கு அப்பாற்பட்ட இடத்தில் அவை இல்லை. இக்காலத்தில் வானவெளி அறிவியலிலும் புவிக்கு அப்பால் காலம், இடம் என்பன இல்லை என்றே கூறப்படுகிறது. -

ஒண்கருட தியானம் -ஒளி, பொருத்தியகருடதியானம்

77