பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளியன்

ஓட வகை



ஒளியன் - புகழ்மிக்க சிவன்.

ஒற்றித்து - ஒற்றுமைப்பட்டு நின்று.

ஒற்றுமை - இயைபு

ஒன்பதாம் திருமுறை -திருவிசைப்பா, திருப்பல்லாண்டு. இவ்விரண்டையும் பாடியவர்கள்: 1. திருமாளிகைத் தேவர் 2.சேந்தனார் 3.கருவூர்த் தேவர் 4. பூந்துருத்தி நம்பி காடநம்பி 5. கண்டராதித்தர் 6.வேணாட்டடிகள் 7.திருவாலியமுதனார் 8.புருடோத்தம நம்பி 9.சேதிராயர்.

ஒன்பது கோள்கள் - பா. நவக்கிரகம். -

ஒன்பது தீர்த்தங்கள் - கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, சரசுவதி,காவிரி,குமரி,பாலாறு, சரயு.

ஒன்பான் சுவைகள் - இன்பம், நகை, கருணை, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அற்புதம், சாந்தம்.

ஒன்றாக - ஒருதலையாக

ஒன்றாதல் - இறைவனின் இன்றியமையாத இயல்புகளில் ஒன்று. உடலிலிருந்து உயிர் வேறுபட்டது. ஆனால், உடலோடு இரண்டறக் கலந்தது. அதுபோல், ஆன்மாவிலிருந்து கடவுள் வேறுபட்டாலும், அதனோடு கடவுள் ஒன்றுபட்டவரே. அதாவது, கலப்பினால் ஒன்று. அவையேயாய் நிற்றல் பா. உடனாதல், வேறாதல்.

ஒன்று - ஒவ்வொரு குறிப்பிட்ட காலம், அது, இறை.

ஒன்று அணையா முலத்து - இது சிவஞானபோதவெண்பா 28 இல் உள்ளது. இதில் கூறப்பட்டவை, கேவல சாக்கிரம், கேவல . செப்பனம், கேவல சுழுத்தி, கேவல துரியம், கேவல துரியாதீதம் ஆகிய ஐந்து காரண காரிய அவத்தைகள்,

ஒன்று அலா - உருவம் அருவம் என்று ஒன்று இல்லாத, எ-டு ஒன்று அலா ஒன்றால் உளது ஆகி நின்றவாறு (சிபோபா.5)

ஒன்று அன்று - வெற்றுப் பொருள் அன்று. எ-டு ஒன்றன்று இரண்டன்று உளதன்று இல தன்று (திப 58).

ஒன்று ஒளிக்கும் - அறிவு மேலிட்ட காலத்து ஆணவ ஒளியும் ஆணவம் மேலிட்ட காலத்து அறிவு ஒளியும் உண்டாகும்.

ஒன்றும் இரண்டும் மலத்தார் -ஒரு மலத்தைக்கொண்ட விஞ் ஞானகலரும், இருமலத்தைக் கொண்ட பிரளயாகலரும்.



- பிரமன்.

ஓக்கிய - உயர், நல்ல, எ-டு ஓக்கிய சத்தி.

ஓங்காரம்- ஓம் என்னும் மாந்திரம்

ஓங்கார உரு - சிவன்.

ஓங்குநுதல் ஒலக்கமண்டபம் - சாக்கிர வீடு என்னும் நெற்றியாகிய ஓலக்க மண்டபம்.

ஓசை - இசை, ஐம்புலன்களில் ஒன்று.

ஓடம்-தோணி,பாட்டு சம்பந்தர் ஆற்றில் கோலின்றிச் செல்லுதல்.

ஓட வகை - கரிமுக வம்பி, பரிமுக வம்பி, அரிமுகவம்பி, தோணி, கப்பல் என ஐந்து.

79