பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சைவசித்தாந்த அகராதி

சைவசித்தாந்த அகராதி

அ - சிவன்

அஃறிணை - தாழ்வுள்ள பொருள். எ-டு. மாக்கள். ஒ: உயர்திணை.

அகக்கரணம் - அகக்கருவி: இஃது அகம், உள்ளம் என்று பொருள்படும். சித்தம், மனம், அகங்காரம், புத்தி ஆகியவை அகக்கருவிகள். வேறுபெயர் அந்தக்கரணம்.

அகங்காரம் - செருக்கு எதற்கும் 'நான்நான்'என்று முற்படுதல்.ஒன்றை இன்னதென்று அறிவது. குற்றங்களில் ஒன்று. புத்தியினின்று இராசதத்தை மிகுதியாகக் கொண்டுதோன்றுவது. பா. அகந்தை, ஆங்காரம்.

அகங்காரக்கூறு - தைசதம், வைகாரிகம், பூதாதி என மூன்று.

அகங்கார சைதன்யவாதி - உயிர்வளி முதலிய வளிகளே ஆன்மா என்னும் கொள்கையன்.

அகங்காரமமகாரங்கள் - எதற்கும் 'நான்நான் என்றல் அகங்காரம். பொருள்களை 'எனது எனது' என்று கூறி, உரிமை கொள்ளுதல் மமகாரம். ஏனைய அகங்கார மமகாரங்கள் பசுபோதம், தற்போதம் என்று பெயர் பெறும் பசுபோதம் - ஆன்ம அறிவு. தற்போதம் - இதனை யான் அறிகின்றேன்.

அகங்காரவாதி - மனோமய கோசமே உயிர் என்னும் கொள்கையன். கோசம் - உடம்பு.

அகங்காரான்மாவாதி - அகங்காரமே உயிர் என்னும் கொள்கையன்.

அகச்சந்தானம் - அகப்பரம்பரையினர். சைவ சித்தாந்தக் கொள்கைகளைக் கைலாய பரம்பரையில் அறிவுறுத்தி வந்தவர்கள். நந்திதேவர்,சனற்குமாரர்,சத்திய ஞான தரிசினிகள்,பரஞ்சோதி முனிவர் ஆகிய நான்கு குரவர்.

அகச்சமயம் - வேத சிவாகமங்களையே நூல்களாகக் கொண்டாலும்,அவற்றிற்குப் பொருள் கொள்வதில் சைவ சித்தாந்தத்தோடு வேறுபடும் அறுவகைச் சமயம். அவை யாவன: பாடாவாத சைவம், பேதவாதண சைவம், சிவ சமவாத சைவம், சிவ சங்கிராந்த வாத சைவம், சிவாத்துவித சைவம், சிறப்பாக, இவை முத்தி நிலையில் சைவசித்தாந்தத் தோடு வேறுபடுபவை. பா: அகப்புறச்சமயம்.ஒ.புறச்சமயம்

அகச் சுவை - இராசதம், தாமதம், சாத்துவிகம் என மூன்று.

அகண்டம் - எல்லாம். பிரிவு படாதது, முழுமையானது.

அகண்டாகாரம் - துண்டிக்கப் படாத வடிவம்.

அகண்டன், அகண்டிதன்- கடவுள், சிவன்.

அகண்டிதம் - முழுமை.

அகத்தடிமை - அணுக்கத்தொண்டு செய்பவன்.

அகத்தி - இறைவன் 18 அவதாரங்களில் ஒன்று.


1