பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலையறிவு

கறங்கோலை




5.சாந்தி அதீத கலை - மந்திரம் 3, பதம் 1, எழுத்து 16, புவனம் 15, தத்துவம் 2, அதிதெய்வம் ஈசன் சதாசிவர்.

கலை அடக்க அட்டவணை

கலை நிகலை பி.கலை வித்தை சா.கலை சா.அகலை ஏய்ந்த முறை

மந்திரம் 2 2 2 2 3 11

பதம் 28 21 20 11 1 81

எழுத்து 1 24 7 3 16 51

புவனம் 108 56 27 18 15 224 தத்துவம் 1 23 7 3 2 36

அதிதெய் அயன் மால் உருத்திரன் ஈசன் சதாசிவர்

(சிசிசு 259, 260, 261)

கலையறிவு -கலைகள் 64 சாத்திரகலைகள் 16,

கலை ஆதி - கலை முதல்

கவர்ச்சி - பிளவு படுதல்.

கவயம் - காட்டுப்பசு.

கவலை - ஆணவ விளைவுகள் 7 இல் ஒன்று. கிட்டிய பொருள் பிரிந்த பொழுது வருந்துதல், ஆணவ மல காரியம்

கவி- 1. ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என நான்கு 2.குரங்கு

கவி மாலவன் - கவி - குரங்கு. மாலவன் திருமால்.

கவுணியர்-கெளண்டினியகுலத் தவர்.

கவுணியர்கோன் - திருஞானசம்பந்தர்.

கவுள மதம் - உயிர் அருவம் என்னும் கொள்கையுள்ள சமயம்

கவுளர் - கவுள மதத்தினர்.

கழல் - 1. வெற்றியைக்குறிக்கும் மணிவடம் 2. திருவடி

கழல் வீரன் -வெற்றி மறவன்.

கறங்கோலை கழற்சிங்க நாயனார் - மன்னர்,தொண்டை நாடு. சிவ பத்தர்.இலிங்க வழிபாடு (63),

கழறிற்றறிவார் நாயனார்-அரசர், வேறு பெயர் பெருமாணாயனார். கொடுங்கோளுர் - சேர நாடு, கூத்தபெருமான் பத்தர், இலிங்க வழிபாடு (63)

கழிப்பன் - வண்ணார்

கழிபேருவகை-பெருமகிழ்ச்சி.

கழிப்பித்த காரணம் - நீங்கிய ஏது. எ-டு காட்டிய உள்ளம்.

கழிஇ- கழுவுக, நீக்குக, எ-டுஅம்மலங் கழிஇ (சிபோநூபா.12)

களபம் - சந்தனம், நறுஞ்சாந்து. எ-டு களபம் மலி குறமகள் தன் மணிமுலைகள் கலந்த கந்தன் மலர் (சிபி 4)

களங்கம் - குற்றம்

களவு - திருட்டு. ஐந்து பெரிய பாவங்களில் ஒன்று.

கள் - மது ஐந்து தீய செயல்களில் ஒன்று. எ-டு கள் கொலை வெ ருனி காமம் கனவுகள் (சநி 18)

கள்ளர், கள்வன் - இறைவன். எ-டு கள்வன் தான் உள்ளத்திற்காண் (சிபோ பா 55) இறைவனைக் கள்வன் எனக்கூறுவது சமய மரபு.

கள்ளர் புகுந்த இல்லம் -ஆன்மாவின் அறிவு.

களியார - மகிழ.

களை - அசத்து. எ-டு வானே முதல்களையின் வந்து (சிபோ பா 56).

களைகண் - பற்றுக்கோடு.

கறங்கு - காற்றாடி

கறங்கோலை - காற்றாடி ஒலை.

இது காற்றால் சுழலும் பொழுது, அதிலுள்ள ஒலைகள் வலம்,

87