கலையறிவு
கறங்கோலை
5.சாந்தி அதீத கலை - மந்திரம் 3, பதம் 1, எழுத்து 16, புவனம் 15, தத்துவம் 2, அதிதெய்வம் ஈசன் சதாசிவர்.
கலை அடக்க அட்டவணை
கலை நிகலை பி.கலை வித்தை சா.கலை சா.அகலை ஏய்ந்த முறை
மந்திரம் 2 2 2 2 3 11
பதம் 28 21 20 11 1 81
எழுத்து 1 24 7 3 16 51
புவனம் 108 56 27 18 15 224 தத்துவம் 1 23 7 3 2 36
அதிதெய் அயன் மால் உருத்திரன் ஈசன் சதாசிவர்
(சிசிசு 259, 260, 261)
கலையறிவு -கலைகள் 64 சாத்திரகலைகள் 16,
கலை ஆதி - கலை முதல்
கவர்ச்சி - பிளவு படுதல்.
கவயம் - காட்டுப்பசு.
கவலை - ஆணவ விளைவுகள் 7 இல் ஒன்று. கிட்டிய பொருள் பிரிந்த பொழுது வருந்துதல், ஆணவ மல காரியம்
கவி- 1. ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என நான்கு 2.குரங்கு
கவி மாலவன் - கவி - குரங்கு. மாலவன் திருமால்.
கவுணியர்-கெளண்டினியகுலத் தவர்.
கவுணியர்கோன் - திருஞானசம்பந்தர்.
கவுள மதம் - உயிர் அருவம் என்னும் கொள்கையுள்ள சமயம்
கவுளர் - கவுள மதத்தினர்.
கழல் - 1. வெற்றியைக்குறிக்கும் மணிவடம் 2. திருவடி
கழல் வீரன் -வெற்றி மறவன்.
கறங்கோலை கழற்சிங்க நாயனார் - மன்னர்,தொண்டை நாடு. சிவ பத்தர்.இலிங்க வழிபாடு (63),
கழறிற்றறிவார் நாயனார்-அரசர், வேறு பெயர் பெருமாணாயனார். கொடுங்கோளுர் - சேர நாடு, கூத்தபெருமான் பத்தர், இலிங்க வழிபாடு (63)
கழிப்பன் - வண்ணார்
கழிபேருவகை-பெருமகிழ்ச்சி.
கழிப்பித்த காரணம் - நீங்கிய ஏது. எ-டு காட்டிய உள்ளம்.
கழிஇ- கழுவுக, நீக்குக, எ-டுஅம்மலங் கழிஇ (சிபோநூபா.12)
களபம் - சந்தனம், நறுஞ்சாந்து. எ-டு களபம் மலி குறமகள் தன் மணிமுலைகள் கலந்த கந்தன் மலர் (சிபி 4)
களங்கம் - குற்றம்
களவு - திருட்டு. ஐந்து பெரிய பாவங்களில் ஒன்று.
கள் - மது ஐந்து தீய செயல்களில் ஒன்று. எ-டு கள் கொலை வெ ருனி காமம் கனவுகள் (சநி 18)
கள்ளர், கள்வன் - இறைவன். எ-டு கள்வன் தான் உள்ளத்திற்காண் (சிபோ பா 55) இறைவனைக் கள்வன் எனக்கூறுவது சமய மரபு.
கள்ளர் புகுந்த இல்லம் -ஆன்மாவின் அறிவு.
களியார - மகிழ.
களை - அசத்து. எ-டு வானே முதல்களையின் வந்து (சிபோ பா 56).
களைகண் - பற்றுக்கோடு.
கறங்கு - காற்றாடி
கறங்கோலை - காற்றாடி ஒலை.
இது காற்றால் சுழலும் பொழுது, அதிலுள்ள ஒலைகள் வலம்,