பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காத்தல்

காரணக்குறி


காத்தல் - இறைவன் செய்யும் முத்தொழில்களில் ஒன்று.

காந்தம்-ஈர்க்கும் இரும்பு.

காந்தருவ வேதம் - நான்கு உப வேதங்களுள் ஒன்று. பா. உபவேதம்

காதி - சினம். எ-டு களவுபயம் காமம் கொலைகோபம் காதி (நெதூ 40).

காப்பியம் -காவியம். சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி என ஐந்து

காப்பியவகை-பெருங்காப்பியம் சிலப்பதிகாரம் சிறுகாப்பியம் - யசோதர காவியம்.

காப்பு-தெய்வ வணக்கம் இலக்கணப்படி நூலின் ஒர் உறுப்பு,மெய்கண்ட நூல்களான உண் மை விளக்கம், சிவப்பிரகாசம் ஆகியவற்றில் காப்பு கூறப்பட்டுள்ளது.

காபாலிகம் -' காபாலமதம்.

காமம் - 1. சிற்றின்பம். அவா ஆசை இரண்டும் கொண்டது. இம்மை இன்பம் 2. பகை 6இல் ஒன்று ஒ. பேரின்பம், காதல்.

காமமாதி - காம இன்பம் சாங்கம், உபாங்கம் என இருவகை. சாங்கம் என்பது தழுவுதல், முத்தம் கொடுத்தல் முதலியன. உபாங்கம் என்பது அன்னம், ஆடை, பூடணம், சாதனம் ஆகியவற்றைப் பயன்படுத்துதல்.

காமக்கிழத்தியர் - விலைமகளிர். இன்பத்திற்கு உரிமை உட யோர்.

காமநூல் - இன்பநூல்.

காமன் - மன்மதன். காமவேட்கையைத் துண்டுபவன்.

காரணக்குறி காமிகம் - 28 சிவ ஆகமங்களுள் ஒன்று.

காமியப்பயன்-விரும்பிய பேறு.

காமிய மலம் - மும்மலத்துள் ஒன்று. எ-டு கன்மமும் மூலம் காட்டிக் காமிய மலமாய் நிற்கும் (சிசி ப 129).

காமுகர் - காமம் மிகுந்தவர்.

காயம் - உடம்பு எ-டு ஆர்ப்பாய காயம் தன்னை (சிசிசுப 14)

காயக்குழி - நரகம்

காய் - பாக்கு.

காரணம் - ஏது. முதற்காரணம், துணைக் காரணம், நிமித்த காரணம் எண்மூவகை. முதற் காரணம் மண். துணைக் காரணம்குடம் செய்வதற்குரிய தண்டும் சக்கரமும் நிமித்த காரணம். காரணம் அழியாதது. அதாவது, குடம் செய்வதற்குரிய மண் அழியாதது. காரியம் அழியும் மண்ணால் செய்யப்பட்ட குடம் அழியும். அது போல, உலகிற்கு முதற்காரணம் மாயை, துணைக்காரணம் இறைவன் ஆற்றலும் உயிர் களின் கன்மமும், நிமித்த காரணம் இறைவனே.

'காரண அவத்தை -காரிய அவத்தை நிகழக் காரணமாவது. மூவகை கேவலம், சகலம், சுத்தம். பா. காரிய அவத்தை.

காரண காரிய இலக்கணம் - காரண காரியத்தை ஆராயும் இயல்பு.

காரண காரியம் - ஏதுவும் விளைவும்.

காரணகாரியத் தொடர்பு-ஏது விளைவுத் தொடர்பு

காரணக்குறி-காரணப்பெயர்.