பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

261


கொடுத்து அம்மகளிருடன் மலைகள் தோறும் விரும்பி விளையாடுதலும் அவன்பால் நிலைபெற்ற அருட் குனமாகும்.

அதுவேயுமன்றி ஊர்கள் தோறும் மக்கள் கொண்டாடும் திருவிழாக்களிலும், அன்புடைய அடியார்கள் உளமுருகிப் போற்ற அமைந்த இடங்களிலும், முருகபூசை புரியும் வேலனென்பான் வேலேந்தி வெறியாடுகளத்திலும், காடுகளிலும் இளமரச் சோலைகளிலும் ஆற்றிடைக் குறையிலும், குளங்களிலும் வேறுபல எழில்மிக்க இடங்களிலும் பல தெருக்கள் ஒன்று கூடும் சந்திகளிலும் புதுப்பூ மலருங் கடம்ப மரங்களிலும் மன்றங்களிலும் பொதுவாகிய அம்பலங்களிலும், தெய்வம் உறையும் தூண்கள் நிலைபெற்ற இடங்களிலும், குறையிரந்து வேண்டும் அன்பர்கள் தாம் விரும்பியவாறே பெற்று நின்று வழிபட அவ்வவ்விடங்களிலேயே நிலைபெற எழுந்தருளி யிருத்தலும் திருவருட்பெரியோர் அறிந்து கூறிய மெய்ந்நெறியாகும்.

யான் முற்கூறிய அவ்வவ்விடங்களிலேயாயினுமாக, நீ முற்பட அம்முருகப் பெருமானைக் கண்டபொழுது முகம் விரும்பித் துதித்துக் கைகளைத் தலைமேல் குவித்து நின்று வாழ்த்திப் பின்பு அவன் திருவடிகளிலே தலை பொருந்தும் படி வீழ்ந்து வணங்கி,

"நெடும் பெருஞ் சிமையத்து நீலப்பைஞ்சுனை

ஐவருள் ஒருவன் அங்கை யேற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ இழையணி சிறப்பிற் பழையோள் குழவி

என்பன முதலாக யான் அறிந்து நினக்குக் கூறிய அளவாலேயே நீயும் நினக்குத் தெரிந்த பலவற்றையும் கூறிப் புகழ்ந்து, “நின்னோடு ஒப்பாரில்லாத மெய்ஞ்ஞானத்தை