294
சைவ சித்தாந்த சாத்திர வரலாறு
பொய், மெய் என்னும் அவ்விரு கூற் றுள் ஒன்றிற் பட்டவழி அவற்றாற் புகழப்படும் தலைமைச் சிறப்பினையுடைய நீ கற்றார் கல்லாதார் என்னும் இரு திறத்தாராலும் புகழப்படும் தலைமைச், சிறப்பினையுடைய நீ அச்சிறப்பினின்றும் விலகுவாய் முழுமுதற் கடவுளாகிய நின்னை ஒழிந்த ஏனை உயிர்த் தொகுதிகள் நல்லறங்களால் சிறப்பாகிய விடு பேற்றினைப் பெற்று உயர்தலும், தீவினைகளால் பிறவிப் பெருங்கடலுட்பட்டு இழிவடைதலும் ஆகிய இந்நிலைமை, நின்னுடைய திருவருளாகிய ஆணை வரம்பின் உட்பட்ட தாகும்” என முருகப் பெருமானது பொருள் சேர் புகழ்த் திறங்களைப் போற்றிப் பரவும் நிலையிலமைந்தது,
'பாயிரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்குச்
சேயுயர் பின்னிமுகமூர்ந்தமருழ்க்கித்
தீயழறுவைப்பத்திரியவிட்டெறிந்து
நோயுடைநுடங்குசீர் மாமுதறடிந்து
வென்றியின் மக்களு ளொருமையொடு பெயரிய
கொன்றுண லஞ்சாக் கொடுவினைக் கொஃறகை
மாய வவுனர் மருங்கறத் தடித்தே வல்
நாவலந்தண்பொழில் வடப்ொழி லாயிடைக்
குருகொடு பெயர்பெற்ற மால்வரையுடைத்து
மலையாற்றுப்படுத்த மூவிரு கயத்தலை
மூவிரு கயந்தலை முந்நான்கு முழவுத்தோள்.
ஞாயிற்றேர் நிறத்தகை நளினத்துப் பிறவியை
காய்அய் கடவுள் சேஎய்செவ்வேள்
சால்வ தலைவவெனப்பேன் விழவினுள்
வேலனேத்தும் வெறியு முனவே
அவை வாயுமல்ல பொய்யு అతులు
நீயே வரம்பிற்றிவ்வுலகமாதலிற்
சிறப்போய் சிறப்பின்றிப் பெயர்குவை
சிறப்பினுளுயர் Lrఉు
பிறப்பினு ளிழி பாகலும்
ஏனோர் நின்வலத் தினதே (பரி, 5. 1-21)
என்வரும் பரிபாடற் பகுதியாகும். இதன்கண்