பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

425


என்னுங் குறளால் அகரமாகிய முதலையுடைய எழுத்துக்க ளெல்லாம், அதுபோல இறைவனாகிய முதலையுடைத்து உலகம் என வள்ளுவர் உவமை கூறியவாற்றானும், கண்ணன் ‘எழுத்துக்களில் அகர மாகின்றேன் யானே எனக் கூறிய வாற்றானும் பிற நூல்களானும் உணர்க’ எனவும் தொல் காப்பிய முதற் சூத்திர வுரையில் நச்சினார்க்கினியர் அகரத்தைப் பற்றிக்கூறிய கருத்துக்கள் திருக்குறள் முதலதி காரத்தின் முதற்குறளில் விளக்கமாக அமைந்திருத்தல் காணலாம்.

இத்திருக்குறளைத் திருமூலர் முதலிய திருமுறை யாசிரியர்களும் மெய்கண்டார் முதலிய சைவ சித்தாந்த நூலாசிரியர்களும் தாம் வழிபடும் சிவபரம் பொருளுக்குரிய சிறப்பியல்பினை அறிவுறுத்தும் நிலையில் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார்கள். திருவள்ளுவர் அருளிய திருக்குறளில் கடவுள் உயிர் உலகம் என்னும் முப்பொருள் களைப் பற்றிக் கூறப்பெற்றுள்ள தத்துவவுண்மைகளை அடியொற்றிச் சைவசித்தாந்த மெய்ந் நூற்பொருளை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது உமாபதி சிவாச்சாரியார் இயற்றிய திருவருட்பயன் என்னும் நூல் என்பது முன்னர்க் கூறப்பெற்றது. இந்நூல் திருக்குறளைப் போன்று பத்துக் குறளைத் தன்னகத்தே கொண்டது ஒர் அதிகாரமாகப் பதிமுது நிலைமுதல் அனைந்தோர் தன்மையிறாகப் பத்ததிகாரங்களையுடையது. திருவள்ளுவர் அகரமுதல’ எனத் தொடங்கியது போலவே இந் நூலாசிரியரும்,

“அகரவுயிர் போல் அறிவாகி எங்கும்

நிகரிலிறை நிற்கும் நிறைந்து”

என இந்நூலைத் தொடங்கியுள்ளார். அகரம் நாத மாத்திரையாய் எத்தகைய விகாரமுமின்றி இயற்கையில் தோன்றுவதாய் எழுத்துக்கள் தோறும் நிறைந்து முதன்மை யுற்று நிற்ப, ஏனைய எழுத்துக்களெல்லாம் அவ்வகரத்தின் இயக்கத்தால் வெவ்வேறு முயற்சியிற்றோன்றித் திரிபுடைய வாய் நிலவுதல்போல, ஆதிபகவனாகிய இறைவன் இயற்கை யுணர்வினாய் முற்றுனர்ந்துயாண்டும் நீக்கமற நிறைந்து