பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


அருள் புரிகின்றான் என்பது

$$. - - - - * * ର -

தன்னிற்பிரிவிலா எங்கோமான்' (திருவெம்பாவை)

எனவும்,

“எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்”

(சிவஞான சித்தியார் சுபக். 165)

எனவும்,

“சிவனெனும் பொருளும் ஆதிசத்தியொடு

சேரில் எத்தொழிலும் வல்லதாம்” (செளந்தரியலகிரி)

எனவும் வரும் ஆன்றோருரைகளால் இனிதுனரப்படும்.

இறைவன் தனது அருவாகிய சிற்சத்தியுடன் வேறாதலும் (பேதமாதலும்) ஒன்றாதலும் (அபேதமாதலும்) இன்றி அவ்விரண்டற்கும் பொதுவாய் (தாதான்மிய சம்பந் தத்தால்) நீக்கமின்றி எங்கும் விரிந்து நிற்பன் என்பார் “ஆனையின் நீக்கமின்றி நிற்பன் (சிவஞானபோதம், இரண்டாம் சூத்திரம்) என்றார் மெய்கண்டார். எந்த எந்தப் பொருள் யாண்டும் விரிந்து நிற்கின்றதோ அந்த அந்தப் பொருள் ஒன்றாதலும் இரண்டாதலும் இன்றி அவ்விரண்டற்கும் பொதுமையில் நிற்கும், தன் எல்லை யளவும் விரிந்து பரவிநிற்கும் ஞாயிறு தன்னொளிக்கதிரோடு நீக்கமின்றி நிற்றல் போலும் என்னும் ஏதுவால் இறைவன் தானும் தன்சத்தியும் என இருதிறப்பட்டுத்தனது ஆணையாகிய சிற்சத்தியுடன் நீக்கமின்றி நிற்றலை வலியுறுத்தும் நிலையில் அமைந்தது 'ஆதிபகவன் என்னும் இத்திருப்பெயர் என்பதும் இது மாதொருகூறாகிய அம்மை யப்பரைக் குறித்த பெயரென்பதும் நன்கு துணியப்படும்.

"அம்மையப்ப ரேயுலகுக் கம்மையப்பர் என்றறிக

அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் - அம்மையப்பர்

எல்லா வுலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும்

அல்லார்போல் நிற்பர் அவர்” (திருக்களிற்.1)

எனவரும் திருக்களிற்றுப்படியார் முதற்பாடல், ஆதிபகவன்