பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/707

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

699


என்னும் மும்மலமுடைய உயிர்களைச் சகலர் எனவும் இவ்வாறு ஆன்மாக்களை மூவகையாகப் பகுத்துரைத்தல் சைவ சித்தாந்த நூன்மரபாகும். இம்மரபு,

"மெய்ஞ்ஞானந்தானே விளையும் விஞ்ஞானகலர்க்

கஞ்ஞான வச்சகலர்க்கக்குருவாய் - மெய்ஞ்ஞானம் பின்னுணர்த்து மன்றிப்பிரளயா கலருக்கு முன்னுணர்த்துந் தான்குருவாய் முன்”

(சிவஞானபோதம் வெண்பா 47)

எனவும்,

“உரைதரும் இப்பசுவர்க்கம் உணரின் மூன்றாம்

உயரும் விஞ்ஞானகலர் பிரளயா கலர்சகலர்

நிரையின்மலம், மலங்கன்ம, மலங்கன்மம் மாயை நிற்கும் முதலிருவர்க்கும் நிராதாரமாகிக்

கரையிலருட் பரன்துவிதா சத்திநி பாதத்தாற்

கழிப்பன்மலம், சகலர்க்குக் கன்மவொப்பில்

தரையிலாச்ான் மூர்த்தி ஆதாரமாகித்

தரித்தொழிப்பன் மலம் சதுர்த்தாசத்தி நிபாதத்தால்”

(சித்தியார், சுபக், 254)

எனவும்,

'மூவகை ஆருயிர் வர்க்கம் மூலமலத்தார். கன்ம

மூலமலத்தார். மூன்று முடையாரன்றே, தீவகமாம் எனவுருவாய் வந்து நாதன்

திருநோக்கால் பரிசத்தால் திகழும் வாக்கால் பாவனையால் மிகுநூலால் யோகப் பண்பால் பரவிவரும் அவுத்திரியாற் பாசநாசம் மேவ அருளுதவும், அவுத்திரியிரண்டு திறனாம்

வியன்கிரியை ஞானமென விளம்புமாறே”

(சிவப்பிரகாசம் 8)

எனவும் வரும் மெய்கண்ட நூல்களில் இடம்

பெற்றுள்ளமை காணலாம். மூவகை ஆருயிர் வர்க்கம் ஆகிய இப்பிரிவு,