பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/761

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

752

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


‘மாயா இயந்திரதனுவினுள் ஆன்மா உளது என ஏதுக்களால் எடுத்துரைத்து விளக்கினார்.

தங்குதற்குரிய குடிசை ஒன்றினை அமைக்க வேண்டு மானால், தூண்களாகக் கால்களை நட்டு இருபக்கத்தும் பக்க வாரைகளாகிய கைகளை ஏற்றி அவற்றின் மேற் சார்த்துக் கழிகளை வரிந்துகட்டி அதன்மேல் ஒலை முதலியவற்றால் கூரைவேய்ந்து மண்ணைக் குழைத்துச் சுவரெடுத்து நுழைவாயிலும் புழைக்கடைவாயிலும் என இரண்டு வாசல்களை அமைத்துப் பக்கங்களிற்காற்றுப் புகுந்து இயங்கக் காலதர்களை (சாலேகங்களை) அமைத்துக் கண்டோர் யாவரும் விரும்பித் தங்குதற்கேற்ற கவர்ச்சி யுடையதாகச் செய்து முடித்தல் இயல்பு. இங்ங்னமே அருளாளனாகிய இறைவனும் உயிர்களாகிய நாம் விரும்பித் தங்குதற்கேற்ற கவர்ச்சி வாய்ந்ததாக மக்கள் யாக்கையாகிய இவ்வுடம்பினை நமக்குப் படைத்து வழங்கியுள்ளான். இச்செய்தியினை,

"கால்கொடுத்திரு கையேற்றிக் கழிநிரைத்திறைச்சி

மேய்ந்து தோல்படுத் துதிர நீராற்சுவரெடுத் திரண்டுவாசல் ஏல்வுடைத்தா வமைத்தங்கேழு சாலேகம் பண்ணி மால்கொடுத்தாவி வைத்தார் மாமறைக்காடனாரே'

(4-33-4)

எனவரும் திருநேரிசையில் திருநாவுக்கரசர் சுவைபொருந்தக் கூறியுள்ளார். உயர்தினை உயிர்களுக்கென அமைத்தளிக்கப் பட்ட யாக்கையாகிய இவ்வில்லம் அவ்வுயிருக்கு மட்டுமே யல்லாமல் ஐம்பொறிகள் தங்கி ஆட்சிபுரிதற்குரிய உரிமை இடமாகவும் அப்பொறிகளுக்கிடையே உயிர் ஒதுக்குக் குடியிருக்கவேண்டிய துச்சிலாகவும் (வாடகைவீடாகவும்) அமைந்து மக்கள் வாழ்வுக்குப் பல்வேறு துன்பங்களை விளைப்பதாயினும் இக்குடிசையிற்புகுந்த உயிரான து இதனை விட்டு வெளியேற விரும்பாததொரு கவர்ச்சியினை இதற்கு உண்டாக்கி இதன் கண் உயிர்களைக் குடியேற்றின் இறைவன் என் பார், ‘மால்கொடுத்து ஆவி வைத்தார் மாமறைக் காடனாரே என்றார். இவ்வாறே ஞான