பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/804

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் மேற்கொண்டொழுகிய சிவநெறிக் கொள்கை

795


மேற்குறித்த திருமந்திரப் பாடலில் விளக்கப்பெற்றுள்ளமை கானலாம்.

“ஆதித்தப் பிரகாசம் காட்டாகப் பிரபஞ்சருபத்தைப் பற்றி நின்ற கண்ணானது அந்த உருவங்களைவிட்டு அந்தப் பிரகாசத்துக்கு முதலாயிருக்கிற ஆதித்தனைக் கண்டு பிரிவற நின்றாற்போல, ஆன்மாவும் அருளிடமாகக் கூடிநின்று சத்தாதிவிடயங்களைப் புசித்து நிற்கச் செய்தே அதனையும் விட்டு மனோவிகாரமும் அடங்கி அந்த அருளுக்கு முதலாயிருக்கிற சிவத்தோடும் அந்த அருள் காட்டாகச் சென்று கூடிப் பிரிவற்று இரண்டற நிற்கையால் ஆன்மா அந்தச் சிவத்தோடுங் கூடிச் சிவமாய் நிற்கும் எனக் கூறி, அதற்குப் பிரமாணமாக,

"அவமாயதேவர் அவகதியில் அழுந்தாமே

பாவமாயங்காத்தென்னை யாண்டுகொண்ட பரஞ்சோதி நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாம் ஒழிந்து சிவமான வாபாடித் தெள்ளேனங்கொட்டாமோ” (4)

எனவரும் திருவாசகத் திருப்பாடலை எடுத்துக் காட்டுவர். மதுரைச் சிவப்பிரகாசர் "சிவமாய் என்றது ஆன்மா தற்போதமாய் நிற்பதுஞ் செய்யாமல் தான் என்கிற முதல் கெடுவதுஞ் செய்யாமல் தற்போதங்கெட்டு அந்தச் சிவத்தோடுங்கூடி இரண்டறநின்று அனுபவித்தது என அறிக. அப்படிச் 'சிவமாய்’ என்ற சொல் அந்தச் சிவமாவதுஞ் செய்யாமற் பிரிந்து நிற்பதுஞ் செய்யாமல் நிற்கை என்பதற்குப் பிரமானம் சங்கற்ப நிராகரனத்தில்,

"ஆனாய் என்பதனைத்தும் அவ்வவை தானாகாமையைச் சாற்றிடும் என்க தாமே யெனுமித் தனியேகாரம் அழிந்திலர் அதுவே ஆய்த்திலர் அதுவிட் டொழிந்திலர் பிறிவிலரெனுமிவை யுணர்த்தும்”

(சிவப். 80)

எனச் சிவமாதல் என்னுஞ் சொல்லுக்கு அவ்வாசிரியர் கூறும் உரைவிளக்கம் இங்கு உணரத் தகுவதாகும்.