பக்கம்:சொன்னார்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98


நம்மவர்களில் பலர் இன்னும் பல இடங்களிலும் சமயம் நேர்ந்தால் நம் வீடுகளையும நமக்கு வசேஷ நன்மை செய்திருக்கும இக் கவர்ன்மெண்டையும் காப்பதற்காகப் போர் செய்து, தங்கள் உயிரையும் தியாகஞ் செய்யத் தயாராயிருக்கிறார்கள். நான் கடினமாய்ப் பேசக் கூடும். ஆயினும் நான் சொல்வது உண்மை. தங்களையும் தங்கள் தேசத்தைக்காக்கக்கூடிய ஆற்றலையும் அழித்துவிட்டால், வேறெந்தப் பரிகாரத்தையும் எந்த நாடும் தேட முடியாது.

—ராஜா ராம்பல் சிங்கு

(1886-ல் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில்.)

சாதரணமாக ஒருவன் பள்ளிக்கூடத்தில் படித்த ஒரு புத்தகத்தைப் படிப்பு முடிந்து 10-ஆண்டுகளுக்குப் பிறகு அதை வாசிப்பானானால், அதன் உட்பொருள்களும்,இன்பமும் அப்பொழுதுதான் அவனுக்குத் தெரியவரும். அதன் பிரயோஜனத்தை அவன் பின்புதான் அடையக்கூடும். அதனால்தால் நாம் பள்ளிக்கூடத்தை விட்ட பின்பும் கல்வி கற்க வேண்டியது அவசியமெனக் கூறுகிறேன்.

—சர். ஏ. ராமசாமி முதலியார் (4-5-1928)

(Y. M. C. A. பட்டிமன்றத்தில்)


மாணவர்களாக இருக்கும் பொழுதே நீங்கள் பேசிப் பழக்கிக் கொள்வீர்களானல், அது உங்களுக்கு வருங்காலத்தில், மிகுந்த உதவியாயிருக்கும். ஒவ்வொருவரும் சுயேச்சையாகச் சிந்திக்க வேண்டும். கூட்டங்களில் வெளியிடப்படும் அபிப்பிராயங்களை உள்ளபடி திரும்பிக் கூறிவிடுவது உபயோகப்படாது. உங்களுடைய அபிப்பிராயம் எப்படியிருத்தாலும் பாதகமில்லை. அதைப்பற்றி உங்களுடைய கூட்டங்களில் விவாதிக்க வேண்டும்.

—ஏ. ராமசாமி முதலியார் (16 - 1 - 1928)

சிந்தாதிரிப்பேட்டை மாணவர் சங்க ஆண்டு நிறைவு விழாக் கூட்டத்தில்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/100&oldid=1016043" இலிருந்து மீள்விக்கப்பட்டது