பக்கம்:சொன்னார்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

105


விஞ்ஞானத்தையும், வரலாற்று நூலையும் பிரித்துப் பேசக் கூடாது. தனி மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு இந்த இரண்டையும் கற்க வேண்டும்.

—நேரு (11-10-1962)


இந்தியக் கிறிஸ்தவர்களுக்கு மாத்திரம் ஆயுதத்தை வைத்துக் கொள்ளும் உரிமையை வழங்கி, அவ்வுரிமையை இந்துக்களுக்கும் மகம்மதியர்களுக்கும் இல்லை என்பதால் ஏற்படும் பாரபட்சமான விதிகள், இங்கிலாந்து இந்தியாவிற்குச் செய்த வாக்குறுதிகளையும் பிரதிக்ஞைகனையும் மீறி நடக்கின்றனவென்பதைப் பற்றியும், அம்மாதிரி நடப்பதால் நமக்கு ஏற்படும் அவமானத்தைக் குறித்தும் அநீதியைக் குறித்தும் நான் பேசக்கூடும். எல்லாருக்கும் ஆயுதத்தை வைத்துக் கொள்ளும் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டுமென்று நான் சொல்லவில்லை. இராஜ பக்தியிலும்படிப்பிலும் பிரசித்தி பெற்ற படிப்பாளிகளுக்குத் தக்க நிபந்தனைகளுடனும் விதிகளுக்கடங்கியும் கொடுக்கப்பட வேண்டுமென்றே நான் கூறுகிறேன்.

—ராஜாராம்பல் சிங்கு

(1886-ல் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில்)

நான் அனேக கூட்டங்களுக்குத் தலைமை வகித்திருந்தாலும், இந்த மாதிரி மத சம்பந்தமான கூட்டங்களுக்கு நான் தலைமை வகித்ததேயில்லை. அன்றியும் எந்த மதத்தைப் பற்றியும் நான் விசேஷமாக ஏதும் தெரிந்தவனல்ல என்பதோடு, இஸ்லாம் மதத்தைப் பற்றி நான் ஒன்றுமே அறிந்தவனல்ல. நான் பொதுவாகவே எல்லா மதங்களையும் பெருமையாய் நினைப்பதுடன் எல்லா மதப் பெரியார்களிடத்திலும் நான் மரியாதையும் பக்தியும் காட்டுகின்றவன்.

திவான் பகதூர் C. S. இரத்தின சபாபதி முதலியார்

(1931-ல் கோவையில் நடைபெற்ற நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாவில்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/107&oldid=1016057" இலிருந்து மீள்விக்கப்பட்டது