பக்கம்:சொன்னார்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112


இந்தியக் காங்கிரஸ் ஐக்கிய இந்தியாவின் காங்கிரஸ், இந்துக்களும், முகம்மதியர்களும், கிறிஸ்தவர்களும், பார்சிகளும், சீக்கர்களும், சமூக வாழ்க்கையின் ஆசார சீர்திருத்தம் செய்வோரும், செய்யாதாரும் இதில் கலந்திருக்கிரறோம். நம் யாவருக்கும் பொதுவான சுதந்தரங்களும் கஷ்டங்களும் இருக்கின்றனவென்பதை அறிந்து கொள்வதற்கே நாம் இங்குக் கூடியிருக்கிறோம். நம் சுதந்தரங்களை விர்த்தி செய்வதற்கும் இடுக்கண்களைக் குறைப்பதற்கும் காங்கிரசை நாம் கூட்டியிருக்கிரறோம்.

—சுரேந்திரநாத் பானர்ஜி

(1885ல் புனாவில் நடைபெற்ற 11-வது காங்கிரஸ் மாநாட்டில்)

சமையல் ஒரு கலை. நான் மிகக்குறுகிய காலத்தில் சமையல் செய்யத் தெரிந்து கொண்டேன். மற்றவர்கள் சமைத்த சாப்பாட்டைவிட நானே சமைக்கும் சாப்பாடு எனக்கு மிகவும் பிடிக்கும்.

—பக்தவத்சலம் (8-12-1962)


கலை, மழையைப் போன்றது. வானத்தில் இருந்து நிலத்தில் விழும்வரை அதில் பேதம் இல்லை. ஆனால் அது எந்த நிலத்தில் விழுகிறதோ அதைப் பொறுத்து அதன் தன்மை மாறுகிறது. அது போலத்தான் கலையும்.

—எம். ஜி. ஆர் (10-3-1962)


ஒரு பேராசின் துணையைப் பெற்றுப் போர் புரிதல், அல்லது தேசம் முழுவதும் ஒரே காலத்தில் புரட்சி செய்தல், சுய அரசாட்சிக்குச் செல்லும் வழி என்று சிலர் கூறுகின்றனர். அவ்வழிகள் தேசமக்கட்கும். பொருளுக்கும் அழிவும் கேடும் விளைவிப்பவை. நம் காங்கிரஸ் கோட்பாட்டுக்கு மாறுபட்டவை. நாம் கைக்கொள்ள முடியாதவை. ஆதலால், அவ்வழிகள் தாம் விரும்பும் சுய அரசாட்சியை அடைவதற்கும் நம் தேசத்தின் நிலைமைக்கும் பொருத்தமற்றவை என நாம் தள்ளி விடுவோமாக.

—வ. உ. சி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/114&oldid=1016069" இலிருந்து மீள்விக்கப்பட்டது