பக்கம்:சொன்னார்கள்.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120


நான் சீர்திருத்தக்காரனல்ல. தற்போது உலகில் சீர்திருத்தஞ் செய்வதிலும், சீர்திருத்தக்காரர்களின் வேலையிலும் அதிக கவனஞ் செலுக்கப்பட்டு வருகிறது. சீர்திருத்தக்காரரில் இருவகை வர்க்கம் இருக்கிறது. இரண்டு பேரும் பெரிய உபத்திரவம்தான். சீர்த்திருத்தஞ் செய்வதாக வெளி கிளம்புகின்றவர்கள் எல்லாவற்றையும் தகர்க்க வேண்டு மென்கிறார்கள். வீட்டின் படி சிறியதாயிருக்கிறதென்று வீட்டையே இடித்துத் தள்ள வேண்டுமென்று இவர்கள் சொல்லுவார்கள். படியை மட்டும் பெரிதாகச் செய்யலாமென்ற யோசனையே இவர்கள் மூளைக்கு எட்டாது. இவர்களுக்குத் தாங்கள் என்ன செய்கிரறோம் என்பதே புலப்படுகிறதில்லே. அனுபவம் என்பதே இவர்களுக்குக்கிடையாது. அனுபவத்தில் தென்படும் உண்மைகள் இவர்களுடைய கண்களுக்குத்தெரியாது.

— தொழிலதிபர் ஹென்றி போர்டு


எனக்கு மிகவும் பிடித்தமான பொருள் புத்தகம். புத்தகத்திற்காகப் பணம் செலவழிப்பதில் நான் ஊதாரி என்ற பட்டத்தையும் பெறத் தயார்.

— நேரு


இந்தியாவிலுள்ள தாழ்ந்த வகுப்பார்களெல்லாம் எனது குடும்பத்தினரே. கடந்த ஆறு ஆண்டுகளாக எனது மனைவி மக்களையோ, உறவினர்களையோ முற்றிலும் மறந்து விட்டேனென்பதை நீங்கள் அறியவேண்டும். ஒரு தினத்தில் ஒருமணி நேரமாவது நான் அவர்களோடு சகவாசமாய் இருந்தது கிடையாது. இதிலிருந்து எனது குடும்ப வாழ்க்கையைப் பற்றி ஒருவாறு நீங்கள் ஊகிக்கலாம். இது முற்றிலும் உண்மை என்பதையும், குடும்ப பராமரிப்பை உத்தேசித்துக் கட்டாயம் நடத்தவேண்டிய தொழிலையல்லாது. நான் ஆற்றவேண்டிய கடமைகள் பல உளவென்பதையும் நீங்கள் அறிய வேண்டும்.

—டாக்டர் அம்பேத்கார் (4-3-1932)