பக்கம்:சொன்னார்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

125


1907-ஆம் ஆண்டு புதுச்சேரியில் கவி சுப்பிரமணிய பாரதியார் வீட்டில் என் அரசியல் வாழ்வு தொடங்கியது. அப்போது என் உடம்பிலிருந்த ரத்தத்தை எடுத்து ஒரு வாக்குறுதி எடுத்துக் கொண்டேன். அன்றைய தினம் பிரிட்டிஷ் அரசாங்கத்தை அழித்தே தீரவேண்டுமென்று வைராக்கியம் செய்து கொண்டேன். அந்தக் கொள்கையிலிருந்து இதுநாள் வரையிலும் நான் நழுவியதே கிடையாது. அதுவே எனது ஒரே நோக்கமாகவும் இருந்திருக்கிறது.

—டாக்டர் P. வரதராசுலு நாயுடு (1-6-1947)

(தமது அறுபதாம் ஆண்டு விழாவில்)


தலைவலிக்கேகூட பல்வேறு மாருந்துகள் உண்டு. சில எரிச்சல் தரும்; சில குளிர்ச்சியாய் இருக்கும். மருந்து தடவுவதிலும் பலவகை உண்டே! வேண்டியவர்கள் தடவினால் வலியெல்லாம் பறந்துபோகும்! வேறு யாராவது தடவினால், பழைய வலியே பரவாயில்லை’ என்று சொல்லத் தோன்றும். என்னுடைய முறை, வலி பறந்து போகிற மாதிரி மெல்லத் தேய்க்கிற முறை!

—அறிஞர் அண்ணா (7-3-1967)


1865-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4-ஆம் நாள் சாயங்காலம், புகழ்பெற்ற காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியாரது பள்ளிக்கூட சபா மண்டபத்தில் கூடியசபைக்கு யானும் போயிருந்தேன். அவ்விடத்தில் அநேக கனவான்களும் பண்டிதரும் கூடி, சில நாளைக்குமுன் பெங்களூரில் ஒரு பிராம்மண சிரேஷ்டர் குடும்பத்தில் நடந்த புநர் விவாகத்தின் யுக்தா யுக்த முதலாகிய விஷயங்களைக் குறித்துப் பிரசங்கம் நடந்து கொண்டிருக்கப்பட்ட சமயத்தில், எனது புல்லறிவுக் கெட்டியிருக்கிற சங்கதிகளையும் அபிப்பிராயங்களையும் நான் அவ்விடத்தில் எடுத்துப் பேசமுடியாமல் போய்விட்டது.

சைதாபுரம் காசி விசுவநாத முதலியார் (1870)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/127&oldid=1016095" இலிருந்து மீள்விக்கப்பட்டது