பக்கம்:சொன்னார்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

127


இப்பொழுது இளைஞர்களாய் இருப்பவர்கள்தான் நாளை பெரியோர்களாக வேண்டியவர்கள். இவர்கள்தான் இன்னும் சிலவாண்டுகளுள் நாட்டை ஆளப் போகிறவர்கள். தலைவர்களாய்த் திகழப் போகிறவர்கள். கண்ணாடி தன்னை நோக்குவார் யாரோ,அவர்தம் முகத்தைக் கள்ளங்கபடின்றிக் காட்டுகின்றது. அத்தன்மைத்தேதான் இளைஞர்களும், அவர்களை நல்வழியில் திருப்ப வேணடுமென்றால் திருப்பலாம். தீயவழியில் திருப்ப வேண்டுமென்றால் திருப்பலாம்.அவர்களை அடிமை வாழ்க்கையில் அமிழ்த்த வேண்டுமென்றால் அமிழ்த்தலாம். விடுதலை வழியில் புகுத்த வேண்டுமென்றால் புகுத்தலாம். ஒரு தாய் வயிற்றில் பிறந்த நெப்போலியன் அறிவுள்ளவனானான். வீரன்னான், ஆனால் அவன் அண்ணன் ஜோசப்போ, கோழையானான். மூடளனான். காரணம் எண்ன? நெப்போலியன் கருப்பத்திலிருந்த காலத்து அவன் தாயார் வீரத்திறன் நிகழ்ச்சிகளைப் படித்து, அவ்வீரத்திறனைக் கருப்பத்திலிருந்த நெப்போலியனுக்கு ஏற்றினாள். ஆனால் ஜோசப் கருப்பத்திலிருந்த காலத்திலோ அவள் சோம்பேறியாய் இருந்தாள். ஆகையினாற்றான் நெப்போலியனுக்கும், ஜோசப்புக்கும் அத்துணை வேற்றுமை.

—ஜே. எஸ். கண்ணப்பர் (8-5-1927)

(மாயவரம் இளைஞர் மாநாட்டில்)


என் தாய் நிரம்ப தெய்வபக்தி உள்ளவர்கள் அமெரிக்கர்கள் சந்திரனில்போய் இறங்கிய செய்தியைப் பத்திரிகைகளில் படிக்கக் கேட்டு மிகவும் கவலைப்பட்டுப் போனார்கள். என்னைக் கூப்பிட்டு “தம்பி நாம் வணங்கும் சந்திரனை, ஈஸ்வரன் தலையில் உள்ள சந்திரனை,அமெரிக்கர்கள் பூட்ஸ்காலால் மிதித்து விட்டார்களே!” என்று சொல்லி வருத்தப்பட்டார்கள். அவர்களைச் சமாதானப் படுத்த என்னால் முடியவில்லை.

—தொழிலதிபர் நா.மகாலிங்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/129&oldid=1016098" இலிருந்து மீள்விக்கப்பட்டது