பக்கம்:சொன்னார்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19



பள்ளியில் படித்துக்கொண்டிருத்த காலத்தில் ஒரு நாள் என் தாயாருடன் வந்து கொண்டிருந்த போது நாலைந்து பையன்களுடன் யானைக்குட்டி மாதிரி ஒரு பையன் வருவதைப் பார்த்து நான் ”'களுக்”கென்று சிரித்தேன். அதைப்பார்த்து என் தாயார் அந்தப் பையனப் பார்த்த நீ அப்படி சிரிக்கிறே, அவன் யார் தெரியுமா? பிருத்விராஜின் மகன்' என்றார். அதைக் கேட்ட நான் அவருக்குப் போய் இப்படிப்பட்ட பிள்ளை பிறந்ததே என்றேன். அந்த நாளில் அப்படி இருந்த ராஜ்கபூர்தான் இன்று என்னுடன் நடிக்கும் கதாநாயகன்.

— நர்க்கீஸ் (இந்தி நடிகை)

இப்பொழுது மக்கள், எங்கும் சிலைகளையும் படங்களையும் வைக்கிறார்கள், அந்த மாதிரி ஆசை தோன்றுமானல் இந்திய விவசாயிகளின் சிலையை வையுங்கள்.

— நேரு (17-11-1960)

நான் ஆகாரத்தில் ரொம்ப உஷாராக இருந்து விடுவேன். காலையில் சூடாக ஒரு கப் காபி சாப்பிடுவேன். அப்புறம் கோட்டைக்குப் போவதாயிருந்தால் பதினொரு மணிக்குள் சாப்பாடு. இரண்டு மணிக்கு ஒரு கப் காபி. இரவு இட்டிலியும் சட்னியும். இவ்வளவுதான் என் ஆகாரம்.

— காமராஜ் (15-7-1965)

எனக்குப் பிராமணர்களும் ஒன்றுதான், வேளாளரும் ஒன்றுதான்; இருவரும் தள்ளும் மற்ற ஜாதியாரும் ஒன்று தான். ‘இவன் பேச்சோடு நில்லாதவன், செயலிலும் ஜாதி வித்தியாசத்தை மதியாதவன், அதிலும் பகிரங்க மூர்க்கன். நல்ல ஆசாரிய வம்சத்தில் பிறந்து குலத்தைக் கெடுத்தவன்” என்று என்னைக் குலத்தார் நீக்கி வெகு நாளாயிற்று.

— ராஜாஜி (1926)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/21&oldid=1010352" இலிருந்து மீள்விக்கப்பட்டது