பக்கம்:சொன்னார்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30


இந்நாட்டின் பொருளாதார நிலைமையைப் பற்றி புத்தர்கள் எழுதிவைத்த புத்தகங்களிலிருந்து நாம் முதன் முதலில் அறிந்தோம். புத்தமதம் ஓங்கி வளர்த்திருந்த காலத்தில் நிலம் சம்பந்தமாகப் பட்டா மாற்றும் உரிமையில்லை என்று புரபசர் ரைஸ்டேவிட்ஸ் எழுதியுள்ள புத்தகத்திலிருந்து நாம் அறிகிறோம். அப்போது நாடு செழிப்பாகவும், க்ஷேமமாகவும் இருந்தது. கூலிக்கு வேலை செய்வதை மக்கள் வெறுத்து வந்தனர். அம்மாதிரியான சுபாவ குணம் இந்தியாவில் எல்லா யுகங்களிலும் எக்காலத்திலும் இருந்து வருகிறது.

—லாலா லஜபதிராய் (18-4-1928)
(எர்ணாகுளம்)

கோவிலுக்குள் மூலஸ்தானம் தவிர, மற்ற எல்லா இடங்களிலும் இந்துமதத்தை நம்பாதவர்களும், அதற்கு எதிரிடையாயுள்ளவர்களும் சுற்றித்திரிய இடங்கொடுத்துவிட்டு, இந்து மதத்தைக் கொண்டாடுவதோடு அல்லாமல், இந்து மதத்தில் பிறந்து, அதையே நம்பி, அதிலேயே இருந்து அதற்காகவே இறந்துகொண்டு இருக்கிற இந்து மக்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்பது பொல்லாத தலைவிதியாயிருக்கிறது. என்னுடைய அபிப்பிராயத்தில் இது தீண்டாமையைவிடக் கேவலமானதாயிருக்கிறது.

—பி.டி.ராஜன்(9-6-1928)
(லால்குடி தாலுகா முதலாவது சுயமரியாதை மாநாட்டின் தலைமை உரையில்.)

என் குழந்தைப் பருவத்தில், என் தந்தை எனக்கு எழுத ஒரு சின்னஞ்சிறிய மேசையும், புத்தகங்கள் வைத்துப் படிக்கும் ரஹ்யாலும், ஒரு தங்க மோதிரமும் வாங்கித் தந்தார். அதன் பின் பழைய சாமான்கள் வாங்கும் ஒருவன் வந்தான். அவனிடம் நான் தங்க மோதிரத்தைக் கொடுத்தேன்.என் கை நிறைய அவன் பேரீச்சம் பழம் தந்து சென்றான்.

—பாரசீகக் கவிஞர் இமாம் சாஅதி
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/32&oldid=1013139" இலிருந்து மீள்விக்கப்பட்டது