பக்கம்:சொன்னார்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31



பணவசதி படைத்தவர்கள், பிள்ளை வாரிசு இல்லாதவர்கள், கல்வித்துறைக்கு நிதி உதவவேண்டும். அவர்கள் இந்தத் தலைமுறையில் செய்யும் உதவி பல தலைமுறை மாணவர்களுக்கு பயன் அளிக்கும். கல்வித் துறையில் நாம் போதிய முதலீடு செய்து முன்னேறாவிட்டால், உலக நாடுகளுடன் நாம் எந்தத் துறையிலும் போட்டிப் போட முடியாது.

—இரா. நெடுஞ்செழியன் (2-7-1974)
(தமிழக கல்வி அமைச்சர்)

மூன்று வருடத்திற்கு முன் நான் பட்டத்துக்கு வந்தது முதல், குழந்தை மணத்தை நிறுத்துகிற விஷயமாய்க் கவனம் செலுத்தி வந்தேன். இந்த விஷயத்தைப் பற்றி நான் தீர ஆலோசித்ததில், இந்தத் தீமையை நிறுத்த வேண்டுமாயின் அதற்கு ஒரே வழிதானுண்டு. அது, சட்டம் செய்வதுதான் என்ற முடிவிற்கு வந்தேன். இதனால்தான் எனது பிறந்த நாள் தர்பாரில், பாலிய விவாகத்தைத் தடுக்கும்படி சட்டம் செய்யத் தீர்மானித்திருப்பதாக அறிவித்தேன்.

—மண்டிராஜா (13-4-1928)
(லாகூரில்)

இந்திய சட்ட சபையைப் பற்றிய சட்டத்தில் கேள்வி கேட்கும் சுதந்தரம், கொஞ்சம் பிரதிநிதித்வம் போன்ற அனுகூலமான சில பாகங்கள் இருக்கின்றன. அதிகாரிகள் இந்தியப் படிப்பாளிகளிடத்தில் அவநம்பிக்கை வைக்காமல் அவர்களே விசுவாசித்து அவர்கள் தேச அரசாட்சியில் ஈடுபடும்படி செய்ய வேண்டும். அவர்களைப் பகைவர்களாகும்படி அதிகாரிகள் நடந்துகொள்ளக்கூடாது. இந்தியாவின் தரித்திரம், ஆட்சி முறையின் அமைப்பினால் ஏற்படுகிறதே யொழியத் தனிப்பட்ட அதிகாரிகளால் ஆக்கப்படுகிறதில்லை.

-

—தாதாபாய் நவ்ரோஜி
(1893-ல் லாகூரில் நடைபெற்ற ஒன்பதாவது காங்கிரஸ் மாநாட்டில்.)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/33&oldid=1013141" இலிருந்து மீள்விக்கப்பட்டது