பக்கம்:சொன்னார்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37


நான் வாழ்ந்து கெட்டவனில்லை ஏனென்றால் நான் எப்போதும் வாழவேயில்லை. ‘சரிதான் போடா‘ என்று எல்லாவற்றையும் தூக்கி எறிபவன். தமிழ் நாட்டிலேயே எல்லாவற்றையும் மறுக்கின்ற ஆள் நான் ஒருவன்தான்.

—கவிஞர் சுரதா (25 - 7 - 1971)

உலகம் எனக்குக் கெடுதல் செய்திருந்த போதிலும், நான் எனக்குச் செய்து கொண்ட கெடுதல் அதைவிடக் கொடியது.

—ஆஸ்கார் ஒயில்டு (1895)

பொது வாழ்வில் இருப்பவர்களுக்குச் சற்று அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக புத்தியும் வேண்டும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு இவை வேண்டியது இல்லை என்பதோடு, இவைகள் உள்ளவர்கள் உத்தியோகத்தில் வெற்றி பெறவும் முடியாது.

—பெரியார்

அரிஜன் என்றால் விஷ்ணுவை நம்புகிறவன் என்று அர்த்தம். நான் விஷ்ணுவையோ, சிவனேயோ நம்புகிறவன் அல்ல. எனவே என்ன அரிஜன் என்று சொல்வது எப்படிப் பொருத்தமாகும்? எனவே, அப்படி சொல்லாதீர்கள்.

—பசவலிங்கப்பா

கடந்த பத்தாண்டுகளாகப் பல்கலைக் கழகங்களும், பொது ஸ்தாபனங்களும் வற்புறுத்தி அழைத்ததற்கிணங்கி யான் அமெரிக்க ஐரோப்பாவில் பத்து மாதகாலம் நீண்ட பயணம் செய்தேன். எனது நீண்ட பயணத்தில் இருநூறு சொற்பொழிவுகள் செய்தேன். எங்கும் பொது மக்களுக்கு இந்தியாவைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை ஆனல் அறிய வேண்டுமென்ற விருப்பமுள்ளது. சர்வதேச அரசியலில் இந்தியா முக்கியமானதாக ஆகிவருகிறது.

—கவி சரோஜினி தேவி (22 - 1 - 1929

(பம்பாயில்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/39&oldid=1013147" இலிருந்து மீள்விக்கப்பட்டது