பக்கம்:சொன்னார்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38


பெண்கள், தங்களுக்குக் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, வாழ்க்கையில் முன்னேற வேண்டும். நான்கூட சந்தர்ப்பங்களின் பயனாக உருவானவள்தான்.

—விஜயலட்சுமி பண்டிட் (6 - 5 - 1963)

என் தந்தையின் பேருதவியிராவிட்டால், சிறந்த கவிதைகளைத் தரம் பிரித்து உணரும் வாய்ப்பு எனக்குக் கிட்டியிருக்காது. நாங்கள் சின்னஞ்சிறு குழந்தைகளாக இருந்த போதே எங்களுக்கு அவர் அரும்பாடு பட்டுப் பாடம் கற்றுக் கொடுத்தார். என் தந்தை இல்லையென்றால் நானில்லை என்று நான் பெருமிதத்துடன் கூறுவேன்.

—தொருல தாதத் (வங்காளப் பெண் கவிஞர்)

நமது கலாசாலைகளில் தொழிற்கல்வி கற்பிக்க வேணடும். பணமுள்ளவர்கள் தேசசரித்திரம் பூகோள சாஸ்திரம், தத்துவ சாஸ்திரம் முதலியவைகளில் தேர்ச்சி பெறுவதற்கு வேண்டிய கல்வியைக் கற்கலாம். சாதாரண மாணவர்கள் எல்லோரும் நன்கு எழுதவும் பேசவும், அவசியமானால் உபநியாசம் செய்யவும் வேண்டிய கல்வியைக் கற்பதோடு, தொழிற் கல்வியையும் கற்கவேண்டும். தந்தி வாசிக்கும் அளவு ஆங்கிலமும் கற்றுக்கொள்ள, விவசாயம், கைத்தொழில் ஆகியவற்றை மாணவர்கட்குப் போதிக்கவேண்டும். நன்செய், தோட்டம் ஆகியவற்றில் மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி அளித்தல் அவசியமாகும்.

வ. உ. சி. (3 - 3 - 1928)

(காரைக்குடியில்)

என்னுடைய அகவாழ்வும், புறவாழ்வும் என்னுடைய இனத்தாரின் இறந்தவரும், இருப்பவரும் உழைப்பினலேயே ஆக்கப்பட்டிருக்கின்றன என்பதை நான் நாள்தோறும் உணர்கிறேன். பிறர் உழைப்பால் நான் எவ்வளவு நன்மையைப் பெற்றாேனோ, அத்துணை நன்மையை நான் பிறருக்குச் செய்ய எவ்வளவு உழைக்க வேண்டும்.

—ஐன்ஸ்டின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/40&oldid=1013148" இலிருந்து மீள்விக்கப்பட்டது