பக்கம்:சொன்னார்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51


ஒரு இந்திரியமாகிய மூக்குக்குச் சுறுசுறுப்புத் தருதற்காக மரத்தினலோ, வெள்ளியினாலோ, பொன்னினாலோ தத்தம் தகுதிக்கேற்பச் செய்யப்பட்ட ஒரு சிறு பெட்டியில் பொடியினை அடைத்து உடம்பிலேயே வைத்து கொண்டிருக்கின்றனர். இப் பொடிக்கு இவ்வளவு பெருமை என்றால், உயிருக்கே பேரின்பத்தை நல்க வல்ல வேற்பெருமானை உடம்பில் ஏன் கொள்ளக்கூடாது? என்று கேட்கிறேன். ‘அவ்வாறு கூறும் நீங்கள் உடன் வைத்திருக்கின்றீர்களா? என்று வினாவலாம். 40 ஆண்டுகளுக்கு முன்னர்க் குப்புசாமிப் பத்தர் என்ற ஓர் அன்பர் தங்கப் பட்டைகளுடன் கூடிய இந்த வேலினை எமக்குச் செய்து தந்தனர். இதனை யாம் எப்போதும் எம்முடன் வைத்துக் கொண்டிருக்கின்றோம்.

—ஞானியாரடிகள்

(கந்தர் சட்டிச் சொற்பொழிவில்)


மனிதன் பிறக்கும்போது அந்தப் பிறப்பின் காரணமாகவே, தான் பிறந்த நாட்டின் பழங்காலம் முழுமைக்கும் வாரிசு ஆகிறான். கல்கத்தாவின் ஒரு மூலையில் பிறந்த நான் இந்தியாவின் செல்வத்திற்கு உடைமையாளனாக ஆகிவிட்டேன். அதே மாதிரி நமது சீன நண்பர்களும் சீன நாட்டு நாகரிகத்தின்மேல் உரிமை பெற்றிருக்கிறாள்கள். இந்திய நாட்டின் பண்டைய வரலாறும் நாகரிகமும் சீன நாட்டுடன் தொடர்புடையவை.

—கவி ரவீந்திர நாத் தாகூர் (24-7-1927)

(சிங்கப்பூரில்)


அதிகம் புகழ்ந்தால் கர்வம் ஏற்பட்டுவிடும். எனக்கு அந்த விதமான ஆபத்து பலதடவை ஏற்பட்டிருக்கிறது. அப்படி மண்டைக் கனம் ஏற்பட்டு தலைவீங்கிவிடக்கூடாது என்பதற்காகத்தான் தலையைச் சுற்றி இறுக்கமாகத் தலைப்பாகை கட்டியிருக்கிறேன்.

— சி. வி. ராமன் (17-1-1963

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/53&oldid=1013986" இலிருந்து மீள்விக்கப்பட்டது