பக்கம்:சொன்னார்கள்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57


தமிழ் நாட்டில் தமிழ்ப் பாட்டுக்களே பாடவேண்டும் என்றால், இதர மொழிப் பாடல்களை பகிஷ்கரிப்பது என்று அர்த்தமல்ல.

—நடிகர். எம். கே. தியாகராஜபாகவதர் (14-9-1941)


ஒரு உண்மையான பெரியாருக்கு வேண்டிய குணங்கள் மூன்று. அவையாவன: (1) அவரைப் பற்றி உலகத்தார் தப்பபிப்பிராயம் கொள்ள வேண்டும். (2) அவரது கொள்கைகள் எங்கும் கண்டிக்கப்படவேண்டும். (3) அவர் கடுமையாக வையவும் சபிக்கவும் படவேண்டும். இத்தகைய மூன்று தன்மைகளையும் பெற்றவர் நமது பெரியாராவர்.

—டி. கே. சி. (20-7-1928)


நம் கையிலே ஐந்து விரல்கள் இருக்கின்றன. கட்டை விரல், மோதிர விரல், சுண்டு விரல் என்று ஐந்து விரல்களும் தனித்தனியே தான் இயங்குகின்றன. ஆனால், பொதுவான ஒரு வேலை என்று வரும்போது, ஐந்து விரல்களும் ஒன்று சேர்ந்து கொள்ளுகின்றன. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இத்தகைய உறவுதான் இருக்கவேண்டும்.

—அறிஞர் அண்ணா


என் பாட்டன் (மோதிலால் நேரு) என் தந்தை (ஜவஹர்லால் நேரு) என் தாய் (கமலா நேரு) என் கணவர் (பிரோஸ் காந்தி) ஆகியோர் நாட்டுக்காக உயிரையே அர்ப்பணித்துக் கொண்டனர்.

—பிரதமர் இந்திரா காந்தி (1969)


இனி கலாசாலைகளில் ஒரு மணி நேரம் பாஷா கல்வியும் 6-மணி நேரம் தொழிற் கல்வியும் கற்பித்தல் வேண்டும். கைத்தொழில், விவசாயம் ஆகியவற்றைக் கட்டாயம் பாடமாக வைத்தல் அவசியமாகும்.

— வ. உ. சி. (3-3-1928

(காரைக்குடியில்)