பக்கம்:சொன்னார்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்னவோ இந்த நாட்டின் 55 கோடி ஜனங்களில் ஹாஜிமஸ்தான்தான் மாபெரும் பாவிபோல இந்த நாட்டின் பத்திரிகைகளிலும், பாராளுமன்றத்திலும், மகாராஷ்டிர சட்டசபையிலும் என் பெயர் தினம் தினம் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டு போகட்டும். ஒருவனுக்குப் பெருமையோ இழிவோ எதற்கும் இப்படியொரு விலை கொடுத்துத்தான் ஆக வேண்டும். இந்த ஹாஜிமஸ்தானைத் தூக்கிச் சாப்பிடுகிற அளவுக்குப் பெரும் கள்ளக்கடத்தல்காரர்கள் இங்கே உண்டு என்று வேதனையோடு சொல்லிக் கொள்கிறேன்.

—ஹாஜிமஸ்தான் (1975)

(கடத்தல்காரர்)

என்னை அடக்கஞ் செய்த பிறகு கல்லறையின் மேல், “நான் ஒரு தமிழ் மாணவன்’ என்று நீங்கள் எழுத வேண்டும்.

— ஜி. யூ, போப் (12-2-1908)


நான் அயர்லாந்தில் பிறந்தேன்; ஸ்காட்லாந்தில் வளர்ந்தேன்; ஆங்கிலத்தில் மூழ்கினேன். ஆயினும், என் வாழ்நாளில் ஐம்பதாண்டுகளுக்கு மேல் இந்திய நாடும், அந்நாட்டு மக்களுமே என் ஆழ்ந்த கருத்து முழுவதையும் இழுத்துக் கொண்டதனால், நான் இந்தியர்களுள் ஒருவனாகிவிட்டேன்.

— கால்டுவெல்

அரும்பெரும் மனிதர்கள் திடீரென்று தோன்றி விடுவதில்லை. அந்தந்தப் பருவங்கள் அந்தந்தக் காலத்துக்குத்தகுதியான பிரத்தியேகமான மலர்களை உண்டாக்குவது போல, சமுதாயத்தில் மாறிவரும் தேவைகளுக்கேற்ப மகா புருஷர்கள் உருவாக்கப்படுகின்றனர்.

— ராஜாஜி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/62&oldid=1014686" இலிருந்து மீள்விக்கப்பட்டது