பக்கம்:சொன்னார்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71


கடை வள்ளலின் தன்மை, தன்னிடத்து வந்து இரந்தவர்கட்கு இல்லையென்னாமல் கொடுப்பது. கர்ணராஜனைப் போல. இடை வள்ளலின் தன்மை, ஒருவன் தன்னிடத்து வந்து இரவாமல் அவன் குறிப்பறிந்து ஈதலே இடைவள்ளலின் தன்மை. அது கற்பகத் தரு, கலைவள்ளலின் தன்மை, இரவலன் தனக்கு வேண்டுவது இன்னதென்று கருகாமலும், தான் இருக்குமிடத்திற் செல்லாமலும் அவ்விரவலன் ஓரிடத்திலிருக்க, அவனுக்கு வேண்டுவன யாவும் ஒருங்கே கொடுத்தலும், மற்றாெருவரை அவன் இனி இரவாமலும் அப்படிக் கொடுக்கும் பொருள் அந்த இரவலனது ஜீவதசைபரியத்தம் உதவும்படி கொடுத்தலுமேயாம். இத்தகைமை யுடையவனே தலைவள்ளல். ஒருவன் கொடுக்கும் தகைமை யுடையவனாயினும், தன் வலிக்குட்பட்டவைகளைக் கொடுக் கலாமன்றித் தன் வலிக்குட்படாப் பொருளை எவ்விதம் கொடுக்கக் கூடும்? ஆகையால் அப்பிரபுவினது ஐஸ்வரியம் இத்தன்மையுடைத்தென்று அறிய வேண்டும்.

— சோ. வீரப்ப செட்டியார் (1902)

(நாகை வெளிப்பாளையம் சைவசித்தாந்த சபையில்)


திருவள்ளுவரைப் பற்றிக் கற்பனைக் கதைகள் நாட்டில் உலாவுகின்றன. அந்தக் கட்டுக் கதைகள் சுத்தப் பொய், திருவள்ளுவர் பிறந்தது, பாண்டிய நாடு. பாண்டிய மன்னரின் அந்தரங்கச் செயலாளராக அவர் பணியாற்றினர். அவருக்குப் பாண்டிய மன்னரால் திருவள்ளுவர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

—கி. ஆ. பெ. விசுவாாதம்


இரண்டாவது உலகப் போரின்போது ஹிட்லர் அறுபது லட்சம் யூதர்களை தீயிட்டுக் கொன்றது சரியான காரியம் என்று முன்பு சொன்னேன். நான் சொன்னது சரிதான் என்பதை உலகம் இன்று உணர்ந்து கொண்டிருக்கிறது.

—இடி அமீன்

(உகாண்டா அதிபர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/73&oldid=1014702" இலிருந்து மீள்விக்கப்பட்டது