பக்கம்:சொன்னார்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76


இந்தியாவின் தரித்திரத்திற்குக் காரணம் மக்கள் தொகை அதிகமாய் விட்டதல்ல. இங்கிலாந்திலும் ஜெர்மனியிலும் இந்தியாவைவிட மக்கள் தொகை அதிகமாய்க் கொண்டு வருகிறது. மிக சிக்கனமாகவும் முன் யோசனையுடனும் வேலை செய்து வரும் குடியானவனிடத்திலும் குற்றம் கூறுவதற்கில்லை. அவன் அதிக வட்டிக்குக் கடன் வாங்க வேண்டியிருப்பதற்குக் காரணம் அவனுக்கு உண்பதற்கு ஒன்றும் கிடைக்காமலிருப்பதே. ஆளை அழுத்தக்கூடிய நிலத்தீர்வையும், இந்தியாவின் கைக்தொழில்கள் பாதுகாக்கப்படாமல் இங்கிலீஷ் யந்திரங்களுடன் போட்டி போட்டு அழிந்து போனதுமே இந்தியாவின் தரித்திரத்திற்குக் காரணம்.

—ரமேஷ் சந்த்ரதத்

(1899-ல் லக்ஷ்மணபுரியில் நடைபெற்ற 15-வது காங்கிரஸ் மாநாட்டில்)

நாட்டின் அரசியல், ஜாதி, மதம், மாகாணப் பிரிவு ஆகியவற்றின் அடிப்படையில் இயங்கும் வரையில், எந்தவிதமான சட்டத்தைச் செய்தும் பயனில்லை.

—கிருபளானி (2-12-1960)


நாம் பேச்சு அளவில் வளர்ந்திருக்கிரறோம். இடித்தால் இரும்பு; வெட்டினால் வெள்ளி, தட்டினல் தங்கம், என்று அழகாகப் பேசலாம். ஆணால் தங்கம், வெள்ளி, இரும்பு ஆகியவைகளை பூமியிலிருந்து எடுக்க ஆராய்ச்சி நடத்த வேண்டும்.

—அமைச்சர் வெங்கடராமன் (9.8-1960)

நமக்குத் தலைவலி என்றால் டாக்டர் வந்து மருத்து கொடுப்பார். தலைவலியை வாங்கிக் கொள்ளமாட்டார். அதைப்போல, போர்க்கருவி வரும். ஆனல் போராடுவது நாம்தான்,

—காமராசர் (9.12. 1962)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/78&oldid=1014707" இலிருந்து மீள்விக்கப்பட்டது