பக்கம்:சொன்னார்கள்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77


அரசியலே மோசமானது என்று சில தத்துவ மேதைகள் கூறுகிறார்கள். அரசியல் மோசமானது அல்ல. அரசியலை மக்கள்தான் மோசமாக ஆக்குகிறார்கள். தனிப்பட்டவர்களின் கருத்துக்கள் தனிப்பட்டவர்களின் முன்னேற்றம் ஆகியவையே அரசியல் என்று நாம் ஆக்கிவிட்டோம். ஆனல் உண்மையில் அரசியல் என்பது மக்களின் பொருளாதார சமுதாய நிலையை உயர்த்துவதற்கான பெரியதொரு இயக்கமாகும்.

—இந்திரா காந்தி (16-9-1970)


திறமையில்லாத ஒரு பெண் நடிகை ஆக முடியும் என்பதை எல்லாம் என்னல் நம்ப முடியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் நான் எடுத்து வைத்திருக்கும் ஒவ்வொரு படியிலுமே என்னுடைய உழைப்பு இருக்கிறது. நடிகைகளின் பகட்டில் மயங்கும் பலர் அதற்குப் பின்னல் இருக்கும் அவளுடைய உழைப்பை மறந்து விடுகிறார்கள்.

—நடிகை உஷா நந்தினி


புதிதாய் ஆரம்பிக்கப்படும் ஒவ்வொரு இயக்கமும், அதன் அடிப்படையான முக்கிய கொள்கைகள் உலகத்திலுள்ள சமூகத்தினர் எல்லாராலும் ஒப்புக்கொள்ளப்படுவற்கு முன்னல், இரண்டு பெரிய முட்டுக்கட்டைகளைத் தாண்டித்தான் முன் செல்ல வேண்டுமென்ற ஒரு கண்டிப்பான நியதி ஏற்பட்டிருப்பதுபோல் நமக்குத் தோன்றுகிறது. மக்களால் அக்கொள்கைகள் ஒழுங்கற்றவையென நிராகரிக்கப்படுவதும், பின் அவை மிகவும் சிறப்பானவை அல்லவெனக் கருதி கவனம் செலுத்தாது அலட்சியம் செய்யப்படுவதுமான இவ்விரண்டும் மேலே கூறப்பட்ட முட்டுக்கட்டைகளாகும்.

—சாரதா நந்த சுவாமிகள்(1-4-1926)

(கல்கத்தாவுக்கு அருகேயுள்ள பேளூரில் நடைபெற்ற இராம கிருஷ்ண சங்கத்தின் முதல் மாநாட்டில்)