பக்கம்:சொன்னார்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87


கவர்ன்மெண்டார் நமக்குச் செய்த நன்மைக்காக நாம் மிக்க நன்றி பாராட்டுகிரறோம். ஆனல் அவர்கள் எவ்வளவு நல்லெண்ணமுடையவர்களாயினும் அவர்களால் இராணுவ இலாகாவில் பயங்கரமானதும் சீர்ப்படுத்தக் கூடாததுமான தீங்கு நமக்கு ஏற்படும் பொழுது நாம் நன்றி பாராட்ட முடியாது. நம்முடைய சுபாவத்தைக் குறைத்து, வீர்யத்தை ஒடுக்கி க்ஷத்ரிய குலத்தைச் சேர்ந்த சூரர்களை குயில் பேனா ஓட்டும் ஆட்டு மந்தைகளாகச் செய்யும் பொழுது நாம் நன்றியுள்ளவர்களாயிருத்தல் அசாத்தியமானது.

—ராஜாராம்பல் சிங்கு

(1886-ல் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாது காங்கிரஸ் மாநாட்டில்.)

பாரதத்தைப் போன்ற பெரியதொரு நாட்டில், அதிக உணவு உற்பத்திக்குத் திட்டமிடுவதைப் போன்றே, பிறப்பு விகிதத்திலும் ஒரு கண் வைத்திருப்பது அத்தியாவசியம் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

—டாக்டர் ராஜேந்திர பிரசாத்


மூச்சுவிடுதலின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் சாதாரணமாக நாம் அறிவதில்லை. தடையில்லாமல் சரிவர சுவாசித்துக் கொண்டிருக்கும் வரையில் அதைப்பற்றி கவலைப் படுவதில்லை. ஆனல் ஏதோ கோளாறினால் மூச்சுத் தடைபடும்போது, அதனால் ஏற்படும் சங்கடத்தை உடனடியாக உணருகிரறோம். அது அடியோடு நின்றுவிடுமானல், வாழ்வே நசித்துவிடுவதைப் பார்க்கிரறோம்; “மனிதன்” என்ற பெயரே போய் பிணம் என்ற பெயர் அதற்கு வந்துவிடுகிறது. அப்போதுதான் மனித வாழ்வுக்கு உயிர் நாடியாய் விளங்கிய மூச்சின் பெருமை நமக்கு விளங்குகிறது.

—கே. ராஜாராம் நாயுடு

(சென்னை பார்லிமெண்டரிக் காரியதரிசி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/89&oldid=1015931" இலிருந்து மீள்விக்கப்பட்டது