பக்கம்:சொன்னார்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95


என்னுடைய இரண்டுமகன்களும் வளர்ந்துவிட்டார்கள் பிரதம மந்திரி என்ற அதிகாரியின் கெடுபிடிக்கெல்லாம் அவர்கள் பணிந்து விடுவதில்லை. அவர்கள் தங்களுடைய தனித்தன்மையைக் காத்து வருகிறார்கள்.

— இந்திரா காந்தி (20-11-1970)


ஒருமுறை படே குலாம் அலிகான் பாட்டுபோல நிறைய பிருகா எல்லாம் போட்டுப் பாட வேண்டிய பாட்டு ஒன்றை என்னிடம் கொடுத்துப் பாடச் சொன்னர்கள். பாட்டைப் பார்த்தேன். ‘இது என்னால் பாட முடியாது. என் சாரீரம் பிருகா சாரீரம் இல்லை. என்னே டிரை பண்ணுவதற்குப் பதிலாக சீர்காழி கோவிந்தராஜனிடம் கொடுங்கள். பிருகா போட்டு நன்றாகப் பாடுவார்,’ என்று சொன்னேன். என்னால் முடியாததை முடியாது என்று சொல்வேனே தவிர முடியும் என்று சொல்லி அவமானப்பட் மாட்டேன்.

—டி. எம். செளந்தரராஜன் (18-11-1971)


நான் உத்தியோகம் செய்த காலத்தில் என் சமுசாரத்திற்கு ஒருவிதமான நகையும் செய்து போடவில்லை. செய்து போட வேண்டுமென்று நினைக்கவுமில்லை. பணம் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டுமென்ற நினைவுமில்லை. கடவுளை நம்பினல் அவர் எல்லாம் கொடுப்பார் என்ற விசுவாசம் பலமாயிருந்தது. நான் சம்பாதித்த பணத்தில் மீதி ஏதாவது இருந்தால் என்னுடைய பிள்ளைகளின் படிப்புக்கே செலவழித்தேன். அதற்குச் செலவு செய்ய நான் பின் வாங்கவில்லை

—டிப்டி தாசில்தார் கதிர்வேல் நாயனார் (1918)


என் தொண்டில் எனக்கு உதவியாக இருந்தவர்கள் பலர் அவர்களால் கனவில்கூட நினைத்திருக்க முடியாத பதவியையும், அந்தஸ்தையும், செல்வாக்கையும் அடைந்தார்கள். அடைந்தும் வருகிறார்கள்.

—பெரியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/97&oldid=1016038" இலிருந்து மீள்விக்கப்பட்டது