பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ராஜாஜியின் நெருங்கிய நண்பர்கள் இவரை சின்ன திருவடி என்று செல்லமாக அழைப்பார்கள். ராஜாஜியின் நூல்களை இவர் தமிழ்ப் பண்ணையின் மூலம் பிரசுரித்த விதமே ஒரு பக்தியானது.

ரஸிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்கள் சொன்னது போல, சின்ன அண்ணாமலையைப் போல ஒரு நண்பர் கிடைப்பதற்கு எவ்வளவோ தவம் செய்திருக்க வேண்டும்.

அவருடைய நண்பர் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமை அடைகிறேன்.

சின்ன அண்ணாமலை எழுதிய
“காணக் கண்கோடி வேண்டும்”
என்ற நூலின் முன்னுரையில்
கல்கி - ரா. கிருஷ்ணமூர்த்தி எழுதியது.