பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

101



ஆனால் இவ்வளவு அரும் பெரும் காரியங்கள் செய்த திரு ம.பொ.சி. அவர்களுக்குத் தமிழ்இனம் தகுந்த பெருமை செய்ய வில்லையே என்று இன்னும் நினைத்து மிகவும் மனம் வருந்துகிறேன்.

“கப்பலோட்டிய தமிழன்” புத்தகம் வெளி வந்ததும் திரு ம.பொ.சி. அவர்களின் புத்தகத்திற்குத் தமிழகத்தில் நல்ல வரவேற்பு ஏற்பட்டது. அவர் எழுதிய ‘கட்டபொம்மன்’ என்ற நூல் பலபதிப்புகள் வெளி வந்திருக்கிறது. சிலப்பதிகாரத்தைப் பற்றிய ம.பொ.சி. அவர்களின் ஆராய்ச்சிக்குப் புலவர்கள் மத்தியில் பெரிய மரியாதை ஏற்பட்டிருக்கிறது.

சிலம்புச் செல்வர் ம.பொ.சியின் 71வது பிறந்த நாள் நடைபெற்றபோது அவர் எழுதிய “வந்தே மாதரம்” என்ற நூலை வெளியிட்டு அதன் முதல் பிரதியை என்னிடம் கொடுத்தார்கள். அதைப் பற்றி ம.பொ.சி. அவர்கள் கூறும்போது, “எனது முதல் நூலை வெளியிட்டவர் சின்ன அண்ணாமலை. சிறந்த தேசபக்தர்.” அதனால் இந்த ‘வந்தே மாதரம்’ என்ற நூலின் முதல் பிரதியை அவருக்கு அளிக்கச் சொன்னேன்” என்றார்.

திரு ம.பொ.சி.அவர்களின் அன்பை நினைத்துப் பெருமிதம் கொண்டேன்.