பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

சொன்னால் நம்பமாட்டீர்கள்



“என் ஆப்த நண்பராகிய நீங்கள் பஸ்ஸிலும் நடையிலும் என்னைப் பார்க்க வருவதை நான் தெரிந்துகொண்டும் கம்மா இருந்தால் அந்த நட்பு உண்மை நட்பு ஆகாது. ஆகவேதான் இந்த ஏற்பாடு. நம் நட்பின் அடையாளமாக இந்தக் கார் உங்களையும் என்னையும் தினமும் சேர்த்து வைக்கும்,” என்று சொன்னார்.

சொல்லும்போதே அவர் கண்களில் நீர் பனித்தது. என் கண்களோ குளமாயின.

கல்கியின் நட்பு எனக்கு அவரது கடைசிக்காலம் வரையில் சிரஞ்சீவியாக இருந்து வந்தது. என்றைக்கும் என்னிடம் ஒரே மாதிரியாக ‘தாயன்பு’ காட்டி வந்த பேரறிவாளர் அவர்.

என் தாய் இறந்தபோது கூட எனக்கு அழுகை பொங்கி வரவில்லை. ஆனால் காந்திஜி இறந்த போதும் கல்கி இறந்தபோதும்தான் நான் விக்கி, விக்கி அழுதேன். ஏனெனில் காந்திஜிதான் என்னைத் தேசபக்தனாக்கினார், கல்கி என்னை உயர்த்தி உலகுக்குக் காட்டினார்.