116
சொன்னால் நம்பமாட்டீர்கள்
என் வீட்டில் மறுநாள் நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்வது என்று முடிவாயிற்று.
மறுநாள் காலை 11மணி- நிச்சயதார்த்தத்திற்கு அனைவரும் வந்துவிட்டனர். திருமதி முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் உட்பட பல பிரமுகர்கள் வந்திருந்தார்கள்.
நிச்சயதார்த்தம் நடக்கும் சமயத்தில் எனக்கு ஒரு தந்தி வந்தது. நான் வெளியில் வந்து தந்தியை வாங்கினேன். வாங்கிப் படித்தேன். பலர் என்ன தந்தி? என்று விசாரித்தார்கள். ‘நிச்சயதார்த்தத்தை வாழ்த்தி தந்தி வந்திருக்கிறது’ என்று அனைவருக்கும் கூறினேன்.
நிச்சயதார்த்தம் முடிந்து விருந்து அமர்க்களமாக நடந்தது. எல்லோரையும் முகமலர்ச்சியுடன் திருப்தியாகவிசாரித்து விழாவைச் சிறப்பாகமுடித்தோம்.
எனது நெருங்கிய குடும்ப நண்பர்களான பெங்களூர் சுவாமி குடும்பத்தாரைத் தவிர மற்ற அனைவரும் சென்று விட்டனர். அவர்கள் அன்று இரவு இரயிலில் புறப்படுவதாக இருந்தார்கள்.
நான் அவர்களிடம், ‘நீங்கள் அனைவரும் இரவு ஊருக்குப் புறப்படுங்கள். நான் இப்போதே காரில் எனது ஊருக்குப் புறப்பட வேண்டியிருக்கிறது’ என்றேன்.
“ஏன் என்ன, தந்தி வந்த விஷயமாகவா” என்றெல்லாம் அவர்கள் கேட்டார்கள்.
“ஆம் என் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை என்று தந்தி வந்திருக்கிறது” என்றேன்.